Popular Posts

Friday 25 April 2014

யுடோபியா கிரகத்தில் சாதி (குட்டிக்கதை)

யுடோபியா கிரகத்தில் சாதி (குட்டிக்கதை)








யுடோபியா கிரகத்தில் மக்கள் முப்பது வெவ்வேறு வண்ணங்களில் தோல் நிறங்கள் கொண்ட முப்பது சாதிகளாக வாழ்ந்து வந்தார்கள். அவர்களுள் தலைவரை தேர்ந்தெடுப்பது ஜனநாயக முறையில் நடந்தது. சாதி விட்டு சாதி திருமணம் செய்தால் எட்டு கைகள் ஏழு கால்களுடன் ஆரியக் கடவுளைப் போல ஒரு அவலட்சணமான குழந்தை பிறக்குமென அவர்களின் மூதாதையர்கள் எழுதிவைத்திருந்ததால் அந்த பயத்தில் இயல்பாகவே வேறு சாதியைச் சேர்ந்த மனிதரின் மேல் இன்னொரு சாதி மனிதருக்கு காதல் வந்தாலும் மனதிற்குள்ளேயே வைத்து அடக்கிக்கொண்டார்கள்! அங்கே வாழ்க்கை மிகவும் அமைதியாகப் போய்க்கொண்டிருந்தது. அழகான குழந்தைகள் பிறந்துகொண்டேயிருந்தன. இப்படியான அந்த கிரகத்தில் வெவ்வேறு சாதியில் ஆண், பெண் என இரண்டு சேட்டைக்காரர்கள் பிறந்தார்கள். ஆரம்பத்தில் இருந்தே அவர்களுக்கு கேள்விகள் மேல் தீராக்காதல். பதில்களின் மேல் கொள்ளைக் காமம். இரண்டையும் சேர்த்து ஆனந்தத்தில் திளைப்பதென்பது அவர்களின் இயற்கை புத்தி. பின் என்ன? இருவேறு சாதிகளைச் சேர்ந்த அவர்களுக்குள் காதல் வந்தது. அந்த கிரகத்தின் எட்டு லட்ச ஆண்டுகள் வரலாற்றில் மனதிற்குள்ளேயே அழுத்தாமல் வெளிப்படுத்தப்பட்ட சாதி மறுப்பு காதல் அது! கிரகம் அல்லோலகல்லோலப்பட்டது! தலைவர்கள் திமிறினார்கள், கொதித்தார்கள், கொந்தளித்தார்கள். சாதியை மறுத்து உறவு கொள்வதென்பது கிரகத்தையே அழிக்கும் என தீர்க்கமாக வாதிட்டார்கள். காட்டுக்குள் ஓடிய அவர்கள் சில மாதங்கள் குடும்பம் நடத்திவிட்டு மீண்டும் நாட்டுக்குள் வந்தார்கள். அவர்கள் கையில் மெல்லிய துணியால் போர்த்தப்பட்ட ஒரு பச்சிளங்குழந்தை இருந்தது. இரண்டு கைகள் இரண்டு கால்களுடன் தோற்றமளித்த அந்தக் குழந்தை தன் தந்தை தாயின் லட்சணங்களைத் தாங்கி அழகாக இருந்தது. கிரகத்தாருக்கு அதிர்ச்சி! இத்தனை லட்சம் ஆண்டுகளாக ஒரு பொய்யை நம்பி வாழ்ந்துவிட்டோமே இயற்கையாய் ஊறிய காதலை மரபால் அடக்கி வாழ்ந்தோமே என்ற வெட்கத்திலும், இப்போதாவது நம் இனத்தில் இரு அறிவுடையவர்கள் பிறந்தார்களே என்ற மகிழ்ச்சியிலும் ஒரே நேரத்தில் அந்த கிரகம் இருவிதமான உணர்வுகளுடன் விழாக்காலம் பூண்டது. எங்கும் வானவேடிக்கைகளும், விருந்துகளும் நடந்தன. அன்றோடு அந்த பைத்தியக்காரத்தனமான மரபு பிய்த்தெறியப்பட்டது. வழமையில் இருந்து மாறி புரட்சி செய்த அந்தக் காதலர்கள் உடோபியா கிரகத்தின் புரட்சியாளர்களுள் மிக முக்கியமானவர்களாகக் கருதப்பட்டார்கள்.




அந்த கிரகத்தில் இருந்து சரியாக ஒன்பது லட்சம் மைல் தொலைவில் பூமி என்ற கிரகம் இருந்தது. சாதிமாறி மணம் செய்தாலும் அழகிய குழந்தைதான் பிறக்கும் எனத் தெரிந்தும், சாதி மாறி காதலித்ததற்காக ஒரு இளைஞனை சிலர் காட்டுக்குள் கூட்டிச் சென்று கற்றாழையை அவன் கழுத்தில் வைத்து அழுத்தினார்கள். முள் நிறைந்த அந்த கற்றாழை அவன் கழுத்தை அறுத்து நரம்புகளைக் கடந்து ரத்தத்தை ஆறுபோல் வெளியேற்றிக் கொண்டிருந்தது.




-டான் அசோக்  தலத்தில்  இருந்து ....நன்றி ....

அவன் நிர்வாணமாக .. நடந்து வரான் .. அவனுடைய .ஆணுறுப்பை ..தொட்டு கும்பிடுகிரணுகள் .........

உலகில் .... நடக்கும்  காட்டுமிராண்டி ...தனங்களில் ...... தலைமையகம் ...

நம்ம  நாட்டில்  ... இருக்கோணும் ..போல .....

ஒருத்தன் ... காலை ..கழுவி ..குடிக்க .குடிப்பவன் ... லட்ச .ருபாய் .....

தட்சணையாக ..தருகிறான் .. என்றால் ..என்ன  சொல்ல .......


அதுக்கு ..பெயர் ..பாத ..பூஜை யாம் ... என்ன  சொல்ல ... எப்படி  எல்லாம் ...

இந்த  சாமியாருங்க ...... சாமர்த்தியமா ...  இருக்குறாணுக .........

அந்த   சாமியாருக்கு ..இந்த  பக்தன் ..பாத  பூஜை  செய்யோணுமாம் .....

அப்படி  பூஜை  செஞ்சால் ..... அந்த  பக்தனுக்கு .... மோட்சம்  கிடைக்குமாம் ...

எனக்கு ,,ஒரு  விஷயம்  .. புரியணும் ..

மோட்சம் ... ம் னா ..என்னங்கட ...... அது  எப்படி  இருக்கும் ............


அட  பதுருங்க்களா ...... அவனும்  ஒரு  மனுஷன் ..தான ... அவங்காள .....

கலுவனா ..என்னடா  புண்ணியம்  வர   போகுது .........  இத  செய்யரவன்லாம் 

.யாருன்னா ....    நல்ல  படிச்ச் ... புண்ணியவாங்க தான் ......

 இந்த  முட்டாளுங்க .. அந்த சாமியார் .. மலத்த எடுத்து ..உடம்புல  தடவிக்கிட்டா ... மோட்சம்  கிடைக்கும்னு ..சொன்னா  , அதையும்  செய்வானுக போல  

அப்படி  இவனுங்க .. பாத  பூஜை  செய்யணும்  என்றால்  ...இவன  பெத்த 

தாய் க்கு ..அல்லவா  செய்யணும் .........


என்னமோ  போங்கள் .... இந்த  அவலம்  எப்பதான்  .. மாறுமோ ........


வருஷா வருஷம் ...எதாவது ..ஒரு  சாமியார் ..புதுசா ..கடை ..விரிக்கிறான் .....

நல்லா  கல்லா கட்டுறான் ...தப்பு  பண்ணிட்டு  .மாட்டவும்  செய்யுறான் 

பின்னாடி  காச  
குடுத்துட்டு ... வெளிய  வந்து  எதாவது  ஒரு  வியாக்கியானம் ....பேசிக்கிட்டு 

இருக்கு றான் ....


இதுவாது  சரின்னு ..விட்டால் ......

இன்னொரு  சாமியார் ... ஜெயின்  சாமியார் .... அவன்  நிர்வாணமாக .. நடந்து 

வரான் .. அவனுடைய .ஆணுறுப்பை ..தொட்டு  கும்பிடுகிரணுகள் .........

அட  பாவிங்களா ... எப்பதான்   நீங்கல்லாம் ..திருந்த  போறிங்களோ ...........


             
இந்த' போட்டோ வ பாருங்க ..எதாவது  ஓளி தெரி யுதன்னு ..



மொரட்டு  தீனி  அதான் அய்யாவுக்கு  பூரிப்பு பூரிப்பு 


   

குறிப்பு ..இனி  வரும் .காலங்களில் ... நமது  தலம் ... இன்னும்  புதிய ....

படைப்புகளை  . வெளி இட இருக்கிறது .... தங்களின்  கருத்து  களை 

உங்கள்  மனசாட்சிக்கு  பட்ட தை   சுதந்திரமாக   இங்கே  பதியவும் 

இங்கே  அப்படியே  வெளி இட படும் ...உங்கள்  பதிவுக்கு ... எந்த  தணிக்கையும் 

கிடையாது ... அது எமக்கு  கொடுக்கும்  வசவாக  கூட  இருக்கலாம் ....

வாழ்க  பெரியார் புகழ் ...



நித்தியானந்தாவின் முகத்திரையைக் கிழிக்கும் ஆர்த்திராவ்


நித்தியானந்தாவின் முகத்திரையைக் கிழிக்கும் ஆர்த்திராவ்





நித்தியானந்தாவின் இன்னொரு சீடரான ஆர்த்திராவ், இந்தியா டுடே குழும செய்தியாளர் மிருதுளா சந்துரிக்கு தந்த பேட்டியிலிருந்து...

கேள்வி: பல மாதங்கள் கழித்து இப்போது வந்திருப்பது ஏன்?

பதில்: கர்நாடக போலீசிடம் இரு வருடங்களுக்கு முன்பே புகார் தந்து விட்டேன். ஆனால் இப்போது என்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாக கருதுகிறேன். காரணம், என்னுடைய நெருங்கிய தோழி கோபிகாவைக் காணவில்லை. நீதிமன்ற விசாரணைக்கு முன்பாக என்னையும் அதே வழியில் முடித்து விடுவார்களோ என்ற பயம் இருக்கிறது. அதனால்தான் மீடியாவிடம் பேசினேன்.

கேள்வி: நீங்கள் குழந்தைகளை பலாத்காரம் செய்பவர் என்றும் பால்வினை நோயால் பாதிக்கப்பட்டவர் என்றும் நித்தியானந்தா கூறுகிறாரே?


பதில்: இதெல்லாம் முட்டாள்தனமான குற்றச்சாட்டுகள். அவருக்கு எதிராக பேசுபவர்கள் மீது இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளை சுமத்தி கிரிமினல் வழக்குகளைப் போட்டு சரிக்கட்ட முயற்சிக்கிறார்.

கேள்வி: அவர்மீது உங்களின் பிரதான குற்றச்சாட்டுகள் என்ன?

பதில்: ஆறு வருடங்கள் அவரி டம் சீடராக இருந்தேன். அதில் அய்ந்து வருடங்கள் என்னை அவர் பாலியல் பலாத்காரம் செய்தார். என்னைப் போலவே இன்னும் பலரை அவர் பலாத்காரம் செய்திருக்கிறார். மூளைச் சலவை செய்திருப்பதால் அவர்களால் உண்மையை வெளியே சொல்ல முடியவில்லை.



கேள்வி: சீ.டி.களை வெளியிட்ட போது போலீசிடம் மட்டும் தராமல் மீடியாக்களிடமும் தந்தது ஏன்?

பதில்: வெளியில் சுற்றுக்குவிட நான் வீடியோ படத்தை எடுக்க வில்லை. விஜய்யத்வாஜ், லெனின் போன்றோர் நித்தியானந்தாமீது சுமத்தும் குற்றச்சாட்டுகள் தவறு என்று உறுதி செய்து கொள்ளத் தான் வீடியோ எடுத்தேன். ஆனால் குற்றச்சாட்டுகள் உறுதியாயின. எங்களுக்கிடையிலான செக்ஸ் உறவை ஆன்மீக சங்கமம் என்று சொல்லி நம்ப வைத்தார். வீடியோ வைப் பார்த்த பிறகு நான் அந்த ஆசி ரமத்தை விட்டு வெளியேறினேன்.

கேள்வி: தமிழக முதல்வரைச் சந்தித்தீர்களா?

பதில்: முதல்வர் ஜெ. ஜெயலலிதாவிடம் நேரம் கேட்டிருக்கிறேன். நித் தியானந்தாவின் உண்மை முகத்தைக் காட்ட வாய்ப்புக் கிடைத்தால் நல்லது.

கேள்வி: உங்கள் வழக்கு எந்த அளவிற்கு பலமாக இருக்கிறது?

பதில்: பலமாக இருக்கிறது. மருத்துவ பரிசோதனைக்காக 8 முறை தாக்கீது அனுப்பப்பட்டு விட்டது. ஆனால் ஆண்மை இல் லாதவர் என்று கூறி நித்தியானந்தா நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு மறுத்து வருகிறார்.

----------------------------நன்றி: "இந்தியா டுடே" 18.7.2012 பக்கம் 21

மதங்கள் யாரால் உண்டாக்கப்பட்டவை?


மதங்கள் யாரால் உண்டாக்கப்பட்டவை?



கஷ்டமான பிரச்சினை



மதங்கள் யாரால் உண்டாக்கப்பட்டவை

ஆ-ன்: மதங்கள் கடவுள்களால் உண்டாக்கப்பட்டவை.

ப-தி: அல்ல அவை மனிதர்களால் உண்டாக்கியவை.

ஆ-ன்: ஏன் அப்படிச் சொல்லுகிறாய்.

ப-தி: மதங்கள் எத்தனை உண்டு?

ஆ-ன்: பல மதங்கள் உண்டு.

ப-தி: உதாரணமாக சிலது சொல்லும்.

ஆ-ன்: எடுத்துக்காட்டாக இந்து மதம், புத்த மதம், கிறிஸ்து மதம், முகமது மதம், சீக்மதம், பார்சி மதம், ஜொராஷ்ட்டிர மதம் முதலியவைகளும் இவற்றில் பல உட்பிரிவுகளும் உண்டு.

ப-தி: கடவுள்கள் எத்தனை உண்டு.

ஆ-ன்: ஒரே கடவுள்தான் உண்டு.

ப-தி: இவ்வளவு மதங்களும் யாருக்காக உண்டாக்கப்பட்டவை.

ஆஸ்திகன்: மனித வர்க்கத்துக்காகத்தான்.

ப-தி: மதத்தால் ஏற்படும் பயன் என்ன!

ஆ-ன்: மனிதன், கடவுளை அறியவும், கடவுளுக்கும், தனக்கும் சம்மந்தம் ஏற்படுத்திக் கொள்ளவும், ஆத்ம ஞானம் பெறவும் கடவுள் கருணைக்கு பாத்திரனாகவும் பயன்படுவதாகும்.

ப-தி: அப்படியானால் ஒரே கடவுள் மனித வர்க்கத்துக்கு இத்தனை மதங்களை ஏற்படுத்துவானேன்.

ஆ-ன்: அது மிகவும் சிரமமான கேள்வியாக இருக்கிறது. பெரியார்களைக் கண்டு பேசி பிறகு பதில் சொல்லுகிறேன்.


மதவிபரம்

ப-தி: அதுதான் போகட்டும் இந்து மதம் என்பது என்ன? அது கடவுளால் எப்படி ஏற்படுத்தப்பட்டது.

ஆ-ன்: ஹிந்து மதம் என்றால் வேதமதம் என்று பெயர்.

ப-தி: வேதம் என்றால் என்ன?

ஆ-ன்: கிருக்கு, எஜசு, சாமம், அதர்வணம் என 4 வேதம் உண்டு. அவ்வேத முறைதான் ஹிந்துமதம் என்பது.

ப-தி: இவ்வேதங்கள் யாரால் ஏற்படுத்தப்பட்டவை.

ஆ-ன்: வேதம் கடவுளால் ஏற்படுத்தப்பட்டவை.

ப-தி: வேதம் கடவுளால் ஏற்படுத்தப்பட்டவை என்று யார் சொன்னார்கள்?

ஆ-ன்: வேதம் கடவுளால் ஏற்படுத்தப்பட்டவை என்று வேதம் சொல்லுகிறது. வேதம் கடவுள் வாக்கு என்று வேதம் சொல்லுகிறது.

ப-தி: இதற்கு ஏதாவது சாட்சியோ ஆதாரமோ உண்டா?

ஆ-ன்: வேதத்துக்கும், கடவுள் வாக்குக்கும் ஆதாரமோ சாட்சியோ கேட்பது என்றால் அது பாவமான காரியமே யாகும்.

ப-தி: அது பாவமாக இருக்கலாம். ஆனால் ஆதாரம், ரூஜண இல்லாமல் ஒன்றை ஒருவன் நம்புவது என்றால் அது குற்றமாகாதா?

ஆ-ன்: இதுவும் கஷ்டமான பிரச்சினையாகத்தான் இருக்கிறது. பெரியவர்களைக் கேட்டுப் பார்க்க வேண்டும்.

ப-தி: சரி புத்தமதம் என்றால் என்ன?

ஆ-ன்: புத்த மதம் என்பது புத்தர் என்கிறவருடைய கொள்கை.

ப-தி: அது யாரால் ஏற்பட்டது?

ஆ-ன்: புத்தர் என்கிறவர் காலத்தில் ஏற்பட்டது.

ப-தி: அதற்கு என்ன ஆதாரம்?

ஆ-ன்: புத்தர் என்கிறவர் சொன்னதாக சொல்லப்படும் வாக்குகள்தான்.

ப-தி: புத்தர்தான் சொன்னார் என்பதற்கு ஆதாரம் என்ன?

ஆ-ன்: புத்தர் சங்கதி சரித்திரத்தில் பட்டதாய் இருக்கிறது. அன்றியும் அதில் இன்றைய நிலையில் மற்ற மதங்களைப் போல் கடவுள், கடவுள் வாக்கு, பல அற்புதங்கள் முதலியவை இல்லை என்பதோடு ஆலோசனைக்கும், அறிவுக்கும் பொருத்தமானதை எடுத்துக் கொண்டு மற்றவைகளைத் தள்ளி விடுவதில் பாவமோ, குற்றமோ, கடவுள் தண்டனையோ இல்லை. ஆகையால் அதற்கு ஆதாரம் தேடிக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை.

ப-தி: சரி, ரொம்ப நல்ல மாதிரி சமாதானம் சொன்னீர்கள். அப்படியானால் அம்மதத்தைப் பற்றி நமக்குக் கவலை இல்லை.

ப-தி: கிறிஸ்து மதம் என்பது என்ன?

ஆ-ன்: கிறிஸ்த்தவ மதம் என்பது கிறிஸ்துவால் சொல்லப்பட்ட கொள்கை.

ப-தி: அது எது?

ஆ-ன்: பைபிள்.

ப-தி: கிறிஸ்து என்பவர் யார்?

ஆ-ன்: கிறிஸ்து கடவுள் குமாரர்.

ப-தி: அப்படி என்று யார் சொன்னார்.

ஆ-ன்: கிறிஸ்து சொல்லியிருக்கிறார்.

ப-தி: ஒருவர் தன்னை இன்னான் என்று ரூபிக்க அவரது வாக்குமூலமே போதுமா?

ஆ-ன்: ஏன் போதாது.

ப-தி: அப்படியானால் இப்போது ஒருவன் வந்து உம்மிடம் தான் தான் கடவுள் என்று சொன்னால் ஒப்புக் கொள்ளுவீரா?

ஆ-ன்: இதுவும் கஷ்டமானப் பிரச்சினைதான். பெரியவர்களைக் கேழ்க்க வேண்டும்.


முகம்மதிய மதம்

ப-தி: முகமதிய மதம் என்றால் என்ன?

ஆ-ன்: முகம்மது நபி என்பவரால் சொல்லப்பட்ட கொள்கைகள்.

ப-தி: அதற்கு என்ன ஆதாரம்?

ஆ-ன்: குரான் என்னும் வாக்கியம்.

ப-தி: அது யாரால் சொல்லப்பட்டது?

ஆ-ன்: கடவுளால் மகமது நபி அவர்கள் மூலம் வெளியாக்கப்பட்டது.

ப-தி: அப்படி என்று யார் சொன்னார்?

ஆ-ன்: நபி அவர்கள் சொன்னார்.

ப-தி: அப்படி என்று யார் சொன்னார்?

ஆ-ன்: குரான் வாக்கியங்களில் இருக்கிறதுடன், வேறு பல சாசயங்களுமிருக்கின்றன.

ப-தி: வேறு பல சாசயங்கள் என்பது எவை.

ஆ-ன்: அந்தக் காலத்தில் நபி அவர்களுடன் இருந்த பல பெரியவர்கள் வாக்கு இருக்கிறது.

ப-தி: அவை உண்மை என்பதற்கு ஆதாரம் என்ன?

ஆ-ன்: அந்தப்படி இருக்கும் ஆதாரங்களை நம்ப வேண்டியது தான்.

ப-தி: மற்ற மதங்களும் இதுபோல் தானே?

ஆ-கன்: ஆம்.

ப-தி: அனேகமான கடவுள் வாக்கு, கடவுளால் அனுப்பப்பட்டவர்கள், கடவுள் அவதாரங்கள் என்பவர்கள், அவர்களது வாக்குகள், சம்மந்தப்பட்ட மதங்களின் தத்துவம், பலவித கடவுள் தன்மை பெற்றவர்கள் ஆகிய எல்லோரையும், ஒரே கடவுள் சொன்னார், சிருஷ்டித்தார் என்பதும் நியாயமாகுமா? ஆதலால் இம்மாதிரி மதம் என்பது வியாபாரம் மத கர்த்தர், வேதம், புராணம் என்பவைகள் வியாபாரச் சரக்குகள் என்பது பகுத்தறிவுக்காரர்களுக்கும் படும் விஷயம். இது ஒரு சமயம் தப்பாக இருந்தாலும் இருக்கலாம்.

ஆ-ன்: ஆம் எல்லாம் இப்படிப்பட்டதுதான்.

ப-தி: அப்படி இருக்க இவ்வளவு மதங்களையும் ஒரே கடவுள் உண்டாக்கி இருப்பார் என்று நீரே நம்புகிறீரா? அதனால்தான் இவைகள் ஒவ்வொரு சீர்திருத்தக்காரர்களால் அறிவாளிகளால் முன்பின் ஆராய்ந்து பார்த்து மனித சமூகத்துக்கு நன்மை செய்யவேண்டும் என்ற கவலை கொண்டவர்களால் (மனிதர்களால்) உண்டாக்கப்பட்டது என்று எண்ண வேண்டியிருக்கிறது. அப்படிக்கில்லாமல் ஒரே கடவுள் இருந்து அவரே இவ்வளவு மதத்துக்கும், மத கர்த்தருக்கும் ஆதார புருஷர் என்றால் அப்போது கடவுளின் மேன்மைக் குணம் பாதிக்கப்படவில்லையா? யாரோ சில மனிதர்களுக்கு மேன்மை கொடுப்பதற்காக கடவுளை முட்டாளாக்குவதும் பல கடவுள்களை சிருஷ்டிப்பதும் பல வேதங்களை சிருஷ்டிப்பதும் சரியா?

நாம் இருவரும் இவ்விஷயங்களில் ஒரே கருத்துடையவர்களாகி இவைகள் எல்லாம் சற்று நேரத்துக்கு உண்மை என்றே ஒப்புக் கொள்வோம். அதாவது இந்து மதம் கடவுளால் உண்டாக்கப்பட்டது என்பதையும், வேதம் கடவுள் வாக்கு என்பதையும், கிறிஸ்து கடவுள் அவதாரம் என்பதையும், முகம்மது நபி கடவுளால் அனுப்பப்பட்டவர் என்பதையும் குறானையும், மற்ற மதத்தையும் ஒப்புக் கொள்வோம். ஆனால் அவைகள் எல்லாம் இன்று ஒன்றாய் இல்லாமல் வேறு அபிப்பிராயங்களாகவும், சில முரணானவைகளாகவும் ஒரு மதத்துக்கும், ஒரு மததத்துவத்துக்கும் மற்ற மத தத்துவத்துக்கும் மற்ற தலைவருக்கும் மாறாக இருப்பானேன்? ஒன்றுக்கொன்று இன்றைய அனுபவத்தில் அதிர்ப்தி, வெறுப்பு, துவேஷம் உடையவைகளாக இருப்பானேன்?

ஆ-ன்: இதுவும் சிரமமான பிரச்சினையாகத்தான் இருக்கிறது. பெரியவர்களைக் கேட்க வேண்டும்.

ப-தி: சாவகாசமாய் பெரியவர்களைக் கேட்டு தெரிந்து கொள்ளலாம். ஆனால் இன்று நாம் எதை நம்பி எப்படி நடந்து கொள்வது?

ஆ-ன்: இவைகள் எல்லாம் உண்மை என்றோ, அல்லது உண்மை அல்ல என்றோ எப்படியோ இருக்கட்டும். அதற்கு ஆக நாம் கவலைப்படவேண்டாம். உலகில் மனிதன் உயிருள்ளவரை நல்லது எண்ணு, நல்லது செய் அவ்வளவுதான்.

ப-தி: நல்லது எது? தீயது எது என்பதற்கு அளவு கருவி என்ன?

ஆ-ன்: இது மிகவும் கஷ்டமான பிரச்சினையாகத்தான் இருக்கிறது. ஆனாலும் பெரியவர்கள் நடந்து காட்டியது, சொல்லி இருப்பது இவைகளைக் கண்டு தெரிந்து கொள்ள வேண்டியதுதான்.

ப-தி: பெரியவர் யார் என்பதற்கு அளவு கருவி என்ன? ஒருவர் ஒருவரை பெரியவர் என்றால் மற்றொருவர் அவரை ஒப்புக்கொள்வதில்லை. அவருக்கு மாறாக அல்லது வேறொன்றைச் சொன்னவர்களை பெரியவர் என்கிறான். இதற்கு ஒரு பரீஷை குறிப்பு வேண்டுமே?

ஆ-ன்: இதுவும் கடினமான பிரச்சினையாகத்தான் இருக்கிறது. இதற்கெல்லாம் உம்முடைய சமாதானம்தான் என்ன சொல்லும் பார்ப்போம்.

ப-தி: என் சமாதானம் என்ன? நான் தான் மதத்துவேஷி, பார்ப்பனத் துவேஷி, நாஸ்த்திகன், சுயமரியாதைக்காரர்கள் என்றெல்லாம் பெயர் வாங்கினவனாய் விட்டேனே, என்பேச்சை யார் கேட்பார்கள். நீர் ஆஸ்திகராயிற்றே உமக்கு தெரியுமென்றும், தெரியாவிட்டாலும் உம்முடைய உள்ளத்தில் சதா குடிகொண்டிருக்கிற கடவுள் உணர்த்துவார் என்றும் கருதி உண்மையான சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ளுவதற்காகக் கேட்டேன். நல்ல வேளையாக நீர் பதில் சொல்லாவிட்டாலும் என்னை வையாமல் பெரியவர்களைக் கேட்டுச் சொல்லுகிறேன் என்று சொன்னீரே அதுவே எனக்கு ரொம்ப திருப்தி. ஆஸ்த்திகர்களில் இப்படிப்பட்டவர்கள் அருமை, மிக அருமை. சந்தேகம் கேட்டால் அடி, உதை, நாஸ்திகன், பிராமண துவேஷி, ஆரிய துவேஷி... என்றெல்லாம் வெறிபிடித்தவர்கள் போல் ஆடுவார்கள். ஆதலால் உம்மைப்பற்றிக்கூட எனக்கு சந்தேகம்தான்.

ஆ-ன்: என்ன சந்தேகம்?

ப-தி: நீர் ஆஸ்திகரோ என்னமோ என்று.

ஆ-ன்: நான் உண்மையில் ஆஸ்திகன். அதாவது ஒரு கடவுள் இருப்பார் என்று நம்புகிறவன்.

ஆனால் இத்தனை மதங்களையும், மத கர்த்தாக்களையும் அந்தந்த மத வேதங்களையும் அவையெல்லாம் கடவுளால் சொல்லப்பட்டவை என்பதிலும் அவ்வேதக் கதைகள், புராணங்கள் ஆகியவை உண்மை என்பவைகளையும் பற்றி அவநம்பிக்கை கொண்டவன்தான் .

ப-தி: அப்படியானால் நீர் இருப்பர் என்ற கடவுள் நம்பிக்கையை யார் எந்த ஆஸ்திகர் லட்சியம் செய்வார். ஒரு குறிப்பிட்ட கடவுள், அல்லது ஒரு குறிப்பிட்ட மதகர்த்தர், அல்லது ஒரு குறிப்பிட்ட மதம் என்பவைகளை ஏற்றுக் கொளாதவர், நம்பாதவர் எல்லோரும் மற்ற மதக்காரனுக்கு நாஸ்திகனே - நம்பிக்கையற்றவனே யாவான். நாஸ்திகம் என்பதும் நம்பிக்கை யற்றது என்பதாக எல்லா ஆஸ்திகர்களுக்கு ஒரே பொருள்தான்.

ஆ-ன்: யாரோ எப்படியோ போகட்டும் எனக்கென்ன என் புத்திக்கு சரி என்று பட்டதை செய்து விட்டு செத்துப்போகிறேன்.

ப-தி: ஏன் சாகிறீர். உயிருடன் தான் இருமே உமக்கு சரி என்று படாதைத்தான் செய்யுமே, எனக்கென்ன கவலை? எப்படி இருந்தாலும் ஆஸ்திகர்கள் வைது கொண்டுதானிருப்பார்கள்.

------------------- சித்திரபுத்திரன் என்ற புனைப்பெயரில் தந்தைபெரியார் அவர்களால் எழுதப்பட்ட உரையாடல் - ”குடி அரசு” - 20.03.1938

திராவிடர் கழகத் தலைவர் மீது இனமலரின் அடங்காத வெறி!.









திராவிடர் கழகத் தலைவர் மீது இனமலரின் அடங்காத வெறி!.


நாகரிகம் தெரியுமா நரிகளுக்கு?






தி(இ)னமலர் ஏடு இன்று இப்படியொரு கார்டூனை வெளியிட்டுள்ளது.

எதைச் சொல்லியாவது திராவிடர் கழகத் தலைவர் மீது சேற்றை வாரி இறைக்க வேண்டும் என்பதுதான் இனமலரின் அடங்காத வெறி.

தொடர்ந்து திராவிடர் கழகத் தலைவரைக் கொச்சைப் படுத்துவதாக நினைத்துக் கொண்டு, ஆத்திரம் அறிவுக்குச் சத்ரு என்கிற முறையில் நடந்துகொண்டு வருகிறது.

திராவிடர் கழகத்தை தினமலர் வகையறாக்கள் எதிர்க்கின்றன - சீண்டுகின்றன என்றால் அது நற்சான்றே தவிர வருத்தப்பட என்ன இருக்கிறது? பார்ப்பனர்கள் சரியாக இருக்கிறார்கள். நம் இனமக்களிடத்தில்தான் குழப்பமோ குழப்பம்! திராவிடர் கழகம் ஒன்றும் அரசியல் கட்சியல்ல. தேர்தலில் நிற்கக் கூடியதும் அல்ல.

வரவேற்கவேண்டியதை வரவேற்றும், எதிர்க்க வேண்டியதை எதிர்த்தும் செயல்படுவது என்பது திராவிடர் கழகத்தின் நிலைப்பாடு என்பது புத்தியுள்ள ஒவ்வொருவருக்கும் தெரியுமே!

வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துத் தெரிவிப்பது என்பது நாகரிகத்தின் அரிச்சுவடி! அதேபோல் நல்லது செய்தால் வரவேற்க வேண்டியது என்பது அறிவு நாணயத்தின் பாலபாடம். இவையெல்லாம் தினமலர் பார்ப்பனக் கும்பலுக்கு எங்கேயிருந்து தெரியப் போகிறது?

எங்கே சாவு வரும் - தர்ப்பணம் பண்ணிப் பணம் பறிக்கலாம் என்று கருதும் கழுகுகள் ஆயிற்றே!

தமிழ் செம்மொழியானால் வீட்டுக்கு வீடு பிரியாணி கிடைக்குமா என்று எழுதுகிற சோற்றுப் பண்டார - வயிற்றுப் பிழைப்புக் கூட்டம் இப்படித்தான் கார்ட்டூன் போடும்.

ஆளும் பொறுப்பில் இருந்த எம்.ஜி.ஆர். அவர்களை 13 வருடம் திராவிடர் கழகம் எதிர்த்துத்தான் செயல்பட்டது என்கிற பொது அறிவு கூட இல்லாததுகள் எல்லாம் பேனா பிடிக்கின்றனவே!

இப்பொழுதே தி.மு.க. ஆட்சிக்கு ஆதரவாக இருந்த அதிகாரிகள் யார் யார் என்று ஆள் காட்டி வேலையில் இறங்கிவிட்டது இந்த இனமலர் - இந்தக் கூட்டத்திடம் அரசு எச்சரிக்கையாக இல்லையானால் அரசு வாகனத்தை அதல பாதாளத்தில் இறக்கிவிட்டுவிடும் - எச்சரிக்கை!

---------------------”விடுதலை” 19-5-2011

பார்ப்பன அர்ச்சகர்களின் காமவெறி - கோயில்கள்!





பார்ப்பன அர்ச்சகர்களின் காமவெறி - கோயில்கள்!




விருதுநகர் மாவட்டத்தில் உழைப்புக்கு முக்கியத்துவம் தரும் ஊர் அது. தொழிலில் உலகமே உற்று நோக்கக் கூடிய அளவுக்கு பிரமிப்பான வளர்ச்சி கண்டதற்கு தங்களின் ஆன்மிக ஈடுபாடே காரணம் என்று அந்த ஊரின் மெஜாரிட்டி சமுதாயத்தினர் உறுதி யாக நம்புகிறார்கள். அதனால், தேரோட்டம், சாமி விக்கிரக வீதி உலா, கும்பாபிஷேகம், பூஜை, புனஸ்காரங்கள் என கோயில் காரியங்களில் ஒரு குறையும் வைக்காமல் பக்தி சிரத்தையோடு செய்து வருகிறார்கள்.


மூடி மறைத்தனர்


பணம் வேண்டுமா? பத்ரகாளி கோயிலுக்கு போ! அவளிடம் முறையிடு! நீ கேட்டது கிடைக்கும் என்று சமுதாய பெரியவர்கள், பணக் கஷ்டத்தில் உழலும் தம் மக்களுக்கு ஆறுதல் கூறி அந்தக் கோயிலுக்கு அனுப்பி வைப்பதை வாடிக்கையாகக் கொண்டிருக் கிறார்கள். இந்த அளவுக்கு பிரசித்த பெற்ற அந்தக் கோயிலில் தவறான ஒரு காரியம் நடந்து இப்போது கடும் மன உளைச்சலில் இருக்கிறார்கள் அச்சமுதாய பிரமுகர்கள். தப்பு செய்தது அய்யராச்சே! அவருக்கு சட்டப்படியான தண்டனை கிடைக்கச் செய்தால் வேதம் ஓதும் வாயால் பிராமணர்கள் நம்மை சபித்து விடுவார்களே! புனிதமான இத்திருக்கோயிலில் தெய்வ குற்றம் நடந்து விட்டதே! வெளியில் இது தெரிந்துவிட்டால் அம்மனுக்கு சக்தி இருந்தால் அவள் சன்னிதியில் இப்படியெல்லாம் இது தெரிந்து விட்டால் அம்மனுக்கு சக்தி இருந்தால் அவள் சன்னிதியில் இப்படியெல்லாம் நடக்குமா? என்று பேச ஆரம்பித்து விடுவார் களே! கோயிலுக்கு வரும் கூட்டம் குறைந்து விடுமே என்று பலவாறாக சிந்தித்து, விவாதித்து விவகாரத்தை மூடி மறைத்து விட்டார்கள். ஆனா லும் அரசல் புரசலாக அந்த சமாச் சாரம் வெளியில் கசிந்துவிட்டது.


அர்ச்சகன் ஒட்டம்


அது என்ன தெய்வ குற்றம்?


அந்தக் கோயில் பிரகாரத்தில் உள்ள அஷ்டலட்சுமியை வழிபடுவதில் ஆர்வம் காட்டுவார்கள் பெண்கள். அதற்கென்றே பிரத்யேகமாக அர்ச்சகர் ஒருவரை நியமித்திருந்தது கோயில் நிர்வாகம். அந்த அர்ச்சகரின் பெயர் முத்து சீதாராமன். (வயது 63). மணி அடித்து தீபாராதனை காட்டும் அவருக்கு விபூதி தட்டில் காணிக்கை நிறைய விழும். சாமி கொஞ்சம் குங்குமம் கொடுங்கோ, இல்ல சாமி நீங்களே வச்சு விடுங்கோ என பெண்கள் அவர்முன் பயபக்தியாக நெற்றியை காட்டி நிற்பார்கள். வயதில் முதியவர் என்பதால் அவர் கையால் குங்குமம் இட்டுக் கொள்வதை ஒரு பாக்கியமாக கருதுவார்கள். ஆன்மிகத்தின் பெயரால் பெண்களின் நெற்றியை அவர்களின் அனுமதியோடு தொட முடிந்த அந்த அர்ச்சகருக்கு அன்று ஒரு விபரீத எண்ணம் தோன்றிருக்கிறது. அதை தனியாக வந்த ஒரு சிறுமியிடம் செயல்படுத்த, அவள் போட்ட கூச்சலில் பக்தர்கள் அவரை நையப்புடைத்திருக்கிறார்கள். உடனே இந்த விவகாரத்தை அந்தச் சிறுமியின் பெற்றோரே தொலைபேசி மூலம் காவல் நிலையத்துக்கு தெரிவிக்க, கோயிலுக்கே வந்து அர்ச்சகரை அள்ளிக்கொண்டு போயிருக்கிறது காவல்துறை. கோயில் நிர்வாகமோ எதுக்கு இந்தச் சின்ன விஷயத்தை பெரிசுபடுத்துறீங்க அய்யரு இந்த வயசுல தப்பு பண்ணுவாரா? கீழே விழுந்த உங்க புள்ளய தூக்கி விட குனிஞ்சிருக்காரு, அப்ப மேல விழுந்துட்டாரு போல, ஒருவேளை அய்யரு தப்பு பண்ணியிருந்தா ஆத்தா தண்டிப்பா, அவளை நம்புங்க என்று சிறுமியின் பெற்றோரை சமாதானப் படுத்த முனைந்திருக்கிறது. பெற்றோர் அதற்கு உடன்படாமல் காவல்நிலை யத்தில் புகார் கொடுக்க ஆயத்தமா யிருக்கிறார்கள். அப்போது காவல் துறையினர் நீங்க புகார் கொடுங்க, அய்யருமேல நாங்க நடவடிக்கை எடுக்கிறோம்.


ஆனா, உங்க மக இந்த சின்ன வயசுல கோர்ட், கேஸுன்னு அலைஞ்சு தேவையில்லாம அவமானப்பட வேண்டியிருக்கும் என்று நடைமுறையை விளக்கியிருக்கிறார்கள். உடனே யோசித்த பெற்றோர். காக்கிகள் கூறியபடி சாமி கும்பிட்ட போது வீண் விவாதம் பண்ணி தகராறு செய்தார் என்று அர்ச்சகர் மீது பெயரளவுக்கு புகார் ஒன்றை கொடுத்திருக்கிறார்கள். பிறகென்ன? தப்பித்தோம்; பிழைத்தோம் என கோயில் பணியை ராஜினாமா செய்து விட்டு அர்ச்சகர் நடையைக் கட்டி யிருக்கிறார்.


நாம் அந்தக் கோயில் கமிட்டியின் செயலாளரைச் சந்தித்தோம். என்னமோ நடந்து போச்சு. இதையெல்லாம் எழுதி கோயில் பேரைக் கெடுத்திடாதீங்க. இப்பதான் அந்த அய்யரு வேலைல இல்லியே பக்தை ஒருவர் கொடுத்த நன் கொடைக்கு ரசீது போட்டவாறே நமக்கும் பதில் சொன்னார்.


மற்ற அர்ச்சகர்கள் மட்டும் யோக்கியர்களா?


அந்தக் கோயிலின் மற்ற அர்ச்சகர்களின் நடவடிக்கைகள் குறித்து நம்மிடம் பேசினார் கடைக்காரர் ஒருவர். அந்தக் கோயில்ல இருக்கிற அர்ச்சகர்களுக்கு பான் பராக் பழக்கம் உண்டு. ராத்திரி ஆனா தண்ணி அடிப்பானுக. அதனால கோயில்லையும் போதையிலேயே இருப்பானுக. அங்க ஆஞ்சநேயருக்கு பூஜை பண்ணுற அர்ச்சகர் ஒருத்தரு இன்னொரு அர்ச்சகருகிட்ட பேசிக்கிட்டிருந்த நானே கேட்டிருக்கேன். அவன் தீர்த்தம் கொடுப்பானாம். அத குடிக்கிற இளம் பெண் பக்தைகளோட உதடுக தீர்த்தத்தோட ஈரம் பட்டு ரொம்ப கவர்ச்சியா இருக்குமாம். அப்ப அந்த அர்ச்சகருக்கு ரொம்ப மூடாயிருக்குமாம். இதயெல்லாம் கண்ட்ரோல் பண்ணிக்கிட்டுத்தான் இந்த வேலையை பார்க்க வேண்டி யிருக்குன்னு ரொம்பவும் சலிச்சுக் கிட்டு சொன்னான். இந்த அர்ச்சகருக கையில இருக்கிற செல்போன்ல அந்த மாதிரி அசிங்கம் நெறய இருக்கு. உன் போன்ல என்ன இருக்கு? என் போன்ல என்னெல்லாம் இருக்குன்னு மாற்றி மாற்றி பார்த்துக்குவானுக. இந்த அளவுக்கு வக்கிரம் பிடிச்சு அலையற அர்ச்சகருக பூஜை பண்ணித்தான் சாமி யோட அருள் நமக்கு கிடைக்கு தாக்கும். ரொம்பக் கொடுமையா இருக்கு. சாமி பேரைச் சொல்லிக் கிட்டு இந்தக் காலத்துலயும் இன்ன மும் ஏமாத்திக் கிட்டிருக்கிறவங்கள நாமதான் அறியாமையில சாமி சாமின்னு சொல்லிக் கிட்டிருக்கோம். எல்லா அர்ச்சகரையும் நான் பொதுவா குத்தம் சொல்லல... ஆச்சாரமா இருக்கிற நல்ல அர்ச்சர்களும் இருங்காங்க என்றார்.
--------------------- - சி.என்.இராமகிருஷ்ணன் -=
நன்றி: நக்கீரன் மே 28-31 - 2011

பெரியார் அவர்களால் ஈர்க்கப்பட்ட மா மனிதர்கள்






விடயபுரம் திருவாரூர் மாவட்டம் - நன்னிலம் வட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் - கண் கொடுத்த வனிதம் என்னும் ஊரையடுத்துள்ள குக்கிராமம் (Hamlet).

இந்த ஊர் இன்று உலக வரலாற்று வரைபடத்தில் நீங்கா இடம் பெற்று விட்டது. அதற்குக் காரணகர்த்தா பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார்.

சுயமரியாதைப் பிரச்சாரப் பள்ளி (பயிற்சி முகாம்) இவ்வூரில் நடைபெற்ற போது தான், தான் இது நாள் வரை சொல்லி வந்த கடவுள் மறுப்புக் கொள்கைக்கு, ஆத்மா மறுப்புக் கொள்கைக்கு வார்த்தை வடிவம் கொடுத்து உலக மானுடத்திற்குப் பிரகடனம் செய்தார். தந்தை பெரியார் அந்த வரலாற்றுச் செப்பம் மிகுந்த புரட்சித் திருநாள் இந்நாள்! (24.5.1967).

கடவுள் இல்லை, கடவுள் இல்லை
கடவுள் இல்லவே இல்லை
கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்
கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன்
கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி

ஆத்மா, மோட்சம், நரகம், மறுபிறப்பு, பிதிர்லோகம் ஆகியவைகளைக் கற்பித்தவன் அயோக்கியன்; நம்புகிறவன் மடையன்; இவற்றால் பலன் அனுபவிக்கிறவன் மகாமகா அயோக்கியன்.

தந்தை பெரியார் அவர்களின் இத்தகைய அறிவிப்புக்குப்பின் நாடெங்கும் கடவுள், ஆத்மா மறுப்புக் கல்வெட்டுகள் நிறுவப்பட் டன. தந்தை பெரியார் சிலைகளின் பீடங்களிலும் இவை பொறிக்கப்பட்டன.

புத்தரின் கருத்துச் செல்வங்களை அசோக சக்ரவர்த்தி கல்வெட்டுகளில் பொறித்த ஏற்பாட்டுக்கு நிகரானவை இவையாகும்.

உலகில் எந்த நாட்டிலும் கடவுளை எதிர்க்கும், மதத்தை மறுக்கும் இத்தகு மாமணிகள் பொறிக்கப்பட்ட தில்லை. இது வரலாற்றில் புரட்சி அத்தியாயமாகும்.

எங்கள் மனம் புண்படுகிறது என்று கூறி இவ்வாசகங்களை எதிர்த்து நீதி மன்றமும் சென்றவர்கள் இறுதியில் தோல்வியையே சுமந்தனர் என்பது கூடுதல் தகவல் ஆகும்.

அப்பாசாமி நாயுடு என்னும் பெரு நிலக்கிழார். பக்திப் பழம் தான்; ஆனாலும் தந்தைபெரியார் அவர்களின் பால் அதையும் தாண்டிய கூடுதல் பக்தி, கொண் டவர்! எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் கைகட்டி, வாய் பொத்திப் பேசக் கூடிய மாண்பாளர்.


அவர்தான் இந்தப் பயிற்சிப் பள்ளிக்கான அனைத்துச் செலவையும் ஏற்றுக் கொண்டு ஏற்பாடுகளையும், விரிவாகச் செய்து கொடுத்தவர்.

கோடையின் கொப்புளங்களால் தந்தை பெரியார் தகிக்கப்படக் கூடாது என் பதற்காக ஆசிரமப்பாணியில் பூங்கொடிகள் குடைபிடிக்க கொட்டகை அமைத்து, அதற்குப் பூங்கொடி இல்லம் என்றும் பெயர் சூட்டப்பட்டது.

தந்தை பெரியார் அவர்களால் ஈர்க்கப்பட்ட மா மனிதர்கள் இதுபோல் எத்தனை எத்தனை வகையான வித்தியாசமான வண்ண வண்ண மலர்களோ!

---------------- மயிலாடன் அவர்கள் 24-5-2011 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

பயங்கரவாதம் பெற்றெடுத்த பாதகன் ராஜபக்சே





பயங்கரவாதம் பெற்றெடுத்த பாதகன் ராஜபக்சே




இரண்டாண்டுகளுக்குமுன்!



இரண்டாண்டுகளுக்கு முன் இதே நாளில் ஈழத்தில் இலங்கையின் முப்படைகள் இந்தியா, சீனா, ருசியப் படைகளின் துணையோடு 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களைக் கொன்று குவித்துக்கொண்டு இருந்தது. மே 18ஆம் தேதி (2009) நந்திக்கடலில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது.


சொந்த நாட்டு மக்களை இவ்வளவு குரூரமாகப் படுகொலை செய்தது மனித உருவில் நடமாடும் ஓநாயாகிய ராஜபக்சேவன்றி வேறு யாரும் இருக்க முடியாது. ஜெனிவா உடன்பாட்டில் தடை செய்யப்பட்ட ஆயுதங்களையெல்லாம் சொந்த நாட்டு மக்களைப் படுகொலை செய்யப் பயன்படுத்தியது சிங்கள இராணுவம்.


2009 சனவரி தொடங்கி மே வரை 5 மாதங்கள் தமிழர் களை வேட்டையாடியது கொலைகார சிங்கள அரசு.


உலகம் முழுவதும் உள்ள தமிழர்களும், மனித உரிமையாளர்களும், இந்தக் கொடுமையை எதிர்த்துக் குரல் கொடுத்தார்களேயொழிய, மனித உரிமைகளைக் காப்பாற்றப் பிறந்த அய்.நா.வோ, வேறு குறிப்பிடத் தகுந்த நாடுகளோ முன்வரவில்லை.


2010 சனவரி 14 முதல் 16 முடிய டப்ளின் நகரில் கூடிய நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் கடுமையான குற்றச்சாற்றை இலங்கை ராஜபக்சே அரசின்மீது வைத்ததற்குப் பிறகு தான் அய்.நா. மன்றம் கொஞ்சம் அசைய ஆரம்பித்தது.


இலங்கைப் போர்க் குற்றம் குறித்து விசாரணை நடத்திய மூவர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்தது. அதனை எதிர்த்தும் ராஜபக்சே எவ்வளவு குதி குதித்தார்.


கொழும்பில் உள்ள அய்.நா. அலுவலகத்தை முற்றுகையிட்டு அதன் அலுவலர்களை (120 பேர்கள்) பணயக் கைதிகளாக சிறைப் பிடிப்போம் என்று ராஜபக்சே அமைச்சரவையைச் சேர்ந்த விமல் வீரவன்ச கொக் கரிக்கவில்லையா? அய்.நா.வின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் கொடும்பாவிகள் இலங்கையில் எரிக்கப் படவில்லையா? அய்.நா.வின் கடும் எச்சரிக்கைக்குப் பிறகுதானே வாலைச் சுருட்டியது ராஜபக்சே என்னும் ஓநாய்.


அய்.நா. நியமித்த நிபுணர் குழுவின் செயல்பாட்டை முறியடிக்கவும் தான் ஏதோ மனித குலத்தை ரட்சிக்கப் பிறப்பெடுத்த யோவான் போலவும் காட்டிக்கொள்ள இதே ராஜபக்சே போட்டிக் குழு ஒன்றினை அமைக்க வில்லையா? அதில் சாட்சியம் அளிக்க இலங்கை எதிர்க் கட்சி மறுத்ததையொட்டி அது குறைப்பிரசவம் ஆனது என்பதுதானே உண்மை.


அய்.நா. அமைத்த நிபுணர் குழுவை இலங்கைக்குள் நுழையக்கூட அனுமதிக்கவில்லை இந்த அபாயகரமான மனிதரான ராஜபக்சே!


போரில் கொல்லப்பட்ட தமிழர்கள் போக, உயிரைக் கொஞ்சம் கையில் பிடித்துக்கொண்டிருந்த - அன்றாட வாழ்க்கைக்கே தத்தளித்துக்கொண்டிருந்த லட்சக் கணக்கான தமிழர்களை அந்த நாட்டுக்குரிய அந்தப் பூர்விகக் குடிகளை முள்வேலிக்குள் முடக்கியவரும் பயங்கரவாதம் பெற்றெடுத்த பாதகன் இந்த ராஜபக்சேதான்.


முள் வேலி முகாமுக்குள் முடங்கிக் கிடந்த மக்களைப் பார்த்து விட்டுக் கண்ணீர் விட்டவர் யார் தெரியுமா? சிங்களவர்களில் இரக்கம் உள்ளவர்கள் முற்றிலும் அற்றுப் போய் விடவில்லை என்று காட்டிக் கொள்ளும் வண்ணம் முகாமுக்குள் முடங்கிக் கிடக்கும் மக்களின் அவல நிலையை நேரில் பார்த்து விட்டுக் கண்ணீர் உகுத்தவர் இலங்கையின் தலைமை நீதிபதி சரத் என் சில்வா. நமது நாட்டின் சட்டத்தின்மூலம் தமிழர்கள் நீதியை எதிர்பார்க்க முடியாது. தமிழர்களின் துயரங்கள் நீதிமன்றத்தின் முன் கொண்டு வரப்படவில்லை. இலங்கையில் சிறுபான்மையினர், பெரும்பான்மையினர் என்ற இரண்டு இனம் இல்லை; ஒரே ஒரு இனம்தான் என்று நாம் சொல்லிக் கொண்டு இருப்பதெல்லாம் பச்சை பொய்கள்!


இவைகளை நான் பகிரங்கமாகவே வெளிப் படுத்துகிறேன். இந்நிலை நீடித்தால் விடுதலைப் புலிகளின் போர் மீண்டும் வெடிக்கலாம். இப்படிச் சொல்வதன் மூலம் இலங்கை அதிகாரிகளால் நான் தண்டிக்கப்படலாம் கவலையில்லை என்று கண்ணீர் விட்டாரே!


அய்.நா.வின் நிபுணர் குழு கொடுத்துள்ள பரிந்துரைகளின் அடிப்படையில், கொடுங்கோலன் ராஜபக்சே தண்டிக்கப்பட்டே தீர வேண்டும் என்பதற்கு இலங்கையின் தலைமை நீதிபதி தெரிவித்த இந்தக் கருத்து ஒன்றே ஒன்றுகூடப் போதுமே!


இரண்டாண்டுகள் ஓடிவிட்டன - ஈழத்திலே எம்மினத்திற்கு மரணவோலை எழுதப்பட்டு....


இந்தக் கறுப்பு நாளிலாவது நம் தமிழர்கள் கட்சி வண்ணங்களை மறந்து, ஒரே எண்ணத்தில் எஞ்சியுள்ள நம் இன மக்களின் வாழ்வுரிமைக்காக நிமிர்ந்து நின்று குரல் கொடுக்கக் கூடாதா?


திராவிடர் கழகம் திருப்பித் திருப்பி இதனை முன் வைக்கிறது. அரசியலாக்காமல் ஆழச் சிந்திப்பீர், அருமைத் தலைவர்களே!

--------------------"விடுதலை”தலையங்கம் 17-5-2011

புட்டபர்த்தி சாய்பாபாவின் வக்கிரமான பாலியல் லீலா விநோதங்கள்






சாய்பாபாவின் மறுபக்கம்



சத்திய சாய்பாபா என்று மக்கள் மத்தியிலே மோசடியாக விளம்பரப்படுத்தப்பட்டு இருக்கும் புட்டபர்த்தி சாய்பாபாபற்றி இந்தியா டுடே இதழில் வெளிவந்துள்ள கட்டுரையை மய்யப் படுத்தி எழுதப்பட்டது.

நாட்டில் தங்களைக் கடவுள் அவதாரங்கள் என்று கூறிக்கொண்டு, மக்களது அறியாமையை தங்களது மூலதனமாக்கிக் கொண்டு கொழுத்து வரும் சாமியார்கள், சாமியாரிணிகளின் கொட்டம் நாளும் குறைந்த பாடில்லை.

பக்தி என்ற போதையிலிருந்து மீளாத மக்கள் தங்களது அறிவு, உழைப்பு, பொருள், கவுரவம் எல்லா வற்றையும் இழந்து நிற்க இந்த கபட வேடதாரிகள் காரணமாயிருக்கின்றனர். சட்டப்படி இ.பி.கோ. 420 ஆவது செக் ஷன்படி இவர்கள் கைது செய்யப்பட்டு, மக்களைப் பாதுகாக்க வேண்டும்.

ஆனால், அப்படிப்பட்ட யோக்கியப் பொறுப்புள்ள ஆட்சிகளையோ, தலைவர்களையோ நாம் பூதக் கண்ணாடி வைத்துக்கொண்டல்லவா தேடவேண்டியுள்ளது.

குறுக்கு வழியில் பணம் திரட்ட காவி உடை! குறுக்கு வழியில் செல்வம் திரட்ட காவி உடையும், ஆன்மீகப் போர்வையும் போதும். அதிலும் சரளமாக ஆங்கிலம் பேசும் ஆற்றல் இருந்தால் போதும். இவற்றை விட வேறு எந்த முதலீடும் தேவையில்லை.

திடீர் ஆனந்தாக்களாகவும், சிவானந்த, ஞானானந்த, தயானந்த, தபோவானந்த, சரஸ்வதிகள் என்ற பெயரில் ஒட்டுப் போட்டு திடீர் மடத் தலைவர்களாகி, ரூபாய் 500, 1000 கோடிக்கு அதிபர் ஆகிவிடுகிறார்கள்.

அத்துணை அரசியல் தலைவர்களும், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பேதமின்றி அவர்கள் காலில் விழுந்து கடாட்சம் பெறுவதை தமது கதி மோட்சம் என்று கருதிடும் நிலை!

நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரின் நிலையை நினைந்துவிட்டார் என்ற வேதனையும், வெட்கமும்தான் மிஞ்சுகிறது!

அன்றாடம் காவிகளின் காலித் தனமும், கயமைச் செயல்களும் ஏடுகளில் வெளிவந்தும், நமது மக்களின் அறியாமை, பாமரத்தனம் (படித்த தற்குறிகள், பதவித் தற்குறிகள் உட்பட) போகவில்லையே!

இன்னும் ஆயிரம் பெரியார் அல்லவா தேவைப்படுகின்றனர்?
புட்டபர்த்தி சாயிபாபாவின் மகிமை என்ன?

புட்டபர்த்தி சாயிபாபா என்ற ஒரு சாமியாருக்கு கர்நாடகத்தில் உள்ள அவரது ஆசிரமத்திற்கு உலகம் முழுவதிலும் இருந்து கோடி கோடியாக கொட்டப்படுகின்றன!

பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களைக் கொண்ட அவரது ஆசிரமத்தின் மகிமை என்ன?

கையசைப்பில் விபூதி வரவழைத்தல், லிங்கம் கக்கி எடுத்தல் போன்ற வித்தைகளைக் கண்டு ஏமாளிக் கூட்டம் நாளும் பெருகுகிறதே!

எப்போதும் நோய்க் கிருமி வேகமாகப் பரவும்; சிகிச்சை தாமதமாகும் என்பது உண்மை என்றாலும், நாளும் வரும் செய்தி நாரசாரமாய் உள்ளதே!

புட்டபர்த்தி சாயிபாபாவின் ஆபாசங்கள் இந்தியா டுடே அம்பலப்படுத்துகிறது!

புட்டபர்த்தி சாய்பாபாவின் வக்கிரமான பாலியல் லீலா விநோதங்கள் பற்றி இந்த வார இந்தியா டுடே இதழில் (ஆங்கிலம், தமிழ் எல்லாவற்றிலும்) விவரமான, ஆதார பூர்வமான செய்திக் கட்டுரை வெளி வந்துள்ளது.

அசிங்கம். அருவருப்பு. ஆபாசம் இவை எல்லாம் வழிந்தோடும் செய்திகள்!

இந்த மகானுபவரை நம்பி மந்திரிகள், முதலமைச்சர்கள், உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆட்சியந்திரத்தை முடுக்கும் படாபடா அய்.ஏ.எஸ்., அதிகாரிகள் எல்லாம் பக்தர்களாகி பஜனை செய்வதைவிட தேசிய அவமானம் வேறு உண்டா?

15 ஆண்டுகளுக்கு முன் மலேசியாவில் நடந்தது என்ன?

சுமார் 10, 15 ஆண்டுகளுக்கு முன்பு மலேசியாவில் சுற்றுப்பயணம் செய்த போது, சாய்பாபா மோதிரம் வரவழைப்பது, விபூதி கையிலிருந்து கொட்டுதல்பற்றி கோலக்கிள்ளன் என்ற ஊரில் பேசினேன்.

உடனே எனக்கு சாய்பாபா பக்தர்களிடமிருந்து மிரட்டல் வந்தது. சாய்பாபா பக்தரான ஈழத்தமிழர் (இவர்களில் பலருக்கும் இந்த கிறுக்கு எல்லை மீறி உன்டு) கோலாலம்பூரில் வழக்கறிஞர் திரு. ஜெயராம் என்பவர், எனக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி, சாய்பாபாபற்றிப் பேசினால் வழக்குத் தொடருவோம் என்று மிரட்டினார்.

அங்கேயே, அப்போதே, நானும் வழக்கறிஞன்தான் என்று கூறி வக்கீல் நோட்டீசுக்குப் பதில் நோட்டீஸ் அனுப்பினேன்.

அதுபோலவே மறைந்த மலேசிய திராவிடர் கழக தேசியத் தலைவர் திருச்சுடர் கே.ஆர். இராமசாமி அவர் களுக்காகவும் எனது கூட்டத்தை ஏற்பாடு செய்தவர் என்ற முறையில் வக்கீல் நோட்டிசுக்கு பதிலை நானே அனுப் பினேன்.



தமிழ்நாட்டிற்குத் திரும்பியதற்குப் பிறகும் மற்றொரு மிரட்டல் நோட்டீஸ்; நானும் பதில் எழுதினேன் நீதிமன்றத்தில் சந்திக்கத் தயார் என்று. வழக்கும் தொடுத்தவர்களே சாய்பாபாவைப் புரிந்துகொண்டனர்.

பிறகு அவர்களிடமிருந்து மூச்சுப் பேச்சில்லை; இரண்டு வருடங்களுக்குப் பிறகு திடீரென்று அதே வழக்குரைஞர் திரு. ஜெயராமன் அவர்களிடமிருந்து ஒரு பதிவு அஞ்சல் வந்தது. (அவரது வழக்குரைஞர் குழுமம் ராம் - ரெய்ஸ் - யாப் ஒரு தமிழர், ஒரு சீனர், ஒரு மலாய்காரர்).

அதில், என்னை உங்களுக்கு நினைவு இருக்குமென்று நினைக்கிறேன். முன்பு புட்டபர்த்தி சாய்பாபா பக்தனாக இருந்து உங்களுக்கு நோட்டீஸ் அனுப் பிய வக்கீல் நான்.

நீங்கள் சாய்பாபா பற்றிக் கூறியது 100க்கு 100 உண்மை என்பது இப்போது எங்கள் அனைவருக் கும் புரிந்துவிட்டது.

எப்படியெனில், எங்கள் இளைஞர்கள் பலரை சாய்பாபாவிடம் ஓயிட்பீல்ட் ஆசிரமத்திற்கு ஆன்மீகப் பயிற்சிக்காக அனுப்பினோம்.

அவர்களிடம் அவர் தகாத முறையில் நடந்துகொண்டார். ஆண் புணர்ச்சி மற்றும் பலவிதமான ஒழுக்க ஈனத்திற்கு அவர்களை அழைத்துக் கெடுத்துள்ளார்.

அந்தச் செய்தியைக் கேட்டு அதிர்ச்சி அடைந்து பாபா படங்களைக்கூட போட்டு உடைத்து விட்டோம். அவர் பற்றிய ஒரு நூலைக் குறிப்பிட்டீர்கள்; அதன் பிரதி இருந்தால் எங்களுக்கு அனுப்பி வைத்து உதவுங்கள் என்று எழுதினார்.

நானும் உடன் பதில் எழுதி, அவர் பற்றிய சாய்பாபா சீடர் (அமெரிக்காவிலிருந்து சென்ற டால் பூரூக் எழுதிய அவதார் ஆப்தி நைட் (இரவு நேர அவதாரம்) என்ற புத்தகத்தை அனுப்பி வைத்தேன். அதிலிருந்து மலேசியாவில் இவரது மவுசு பெருமளவுக்குக் குறைந்தது.


சாய்பாபாவை அம்பலப்படுத்திய அமெரிக்க வாழ் நண்பர்



சென்ற இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கனடா, அமெரிக்கா சென்றி ருந்தபோது இண்டர்நெட்மூலம் இவரது தகாத ஒழுக்க ஈனத்தை அம்பலப்படுத்தும் ஒரு கட்டுரையை ஒரு நண்பர் உலகம் முழுவதும் அனுப் பினார்.

அமெரிக்காவில் பணிபுரியும் மற்றொரு நண்பர் (சத்தியா என்பவர்) இதை எனக்கு அனுப்பி பிறகு அடுத்த முறை அந்த நண்பரையே சந்திக்கும் வாய்ப்பையும் ஏற்படுத்தித் தந்தார்!

விடுதலை, உண்மை, தி மாடர்ன் ரேஷனலிஸ்ட் ஏடுகளில் அந்த இணையத்தில் இடம் பெற்றிருந்த கட்டுரையை தமிழிலும், ஆங்கிலத்திலும் வெளியிட் டோம்.

புட்டவர்த்தியின் ஓரினச் சேர்க்கை போன்றவைபற்றி இப்போது இந்தியா டுடே ஏட்டில் பாதிக்கப் பட்ட புதிய வெளிநாட்டு பக்தியாளர்கள் ஆஸ்திரேலியாவிலும், ஜெர்மனியிலும் வழக்குப் போடவும்,

இங்கிலாந்து நாட்டுப் பாராளுமன்றத்தில் முக்கிய அமைச்சரே இதுபற்றி எச்சரிக்கை விடுத்துப் பேசியதும் நமது பகுத்தறிவு மனித நேய இயக்கம் செய் யும் பணி எவ்வளவு முக்கியம் என்பதை எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளன.
---------------தொடரும் .. திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் எழுதிய"சாயிபாபாவின் மறுபக்கம்" எனும் நூலிலிருந்து

என் எதிரிலேயே மைதிலி என்னும் பெண்ணுடன் உறவு கொண்டார் சங்கராச்சாரியார் - அனுராதா ரமணன்





என் எதிரிலேயே மைதிலி என்னும் பெண்ணுடன் உறவு கொண்டார் சங்கராச்சாரியார் - அனுராதா ரமணன்

நம்புங்கள் - சங்கரராமன் கொலைக்கும் சங்கராச்சாரியாருக்கும் சம்பந்தமே இல்லை



சங்கராச்சாரியார் ஸ்வாமிகள் விடுதலை - ஆகா எவ்வளவுப் பவ்ய மான வார்த்தைத் துண்டங்கள்.


அப்படி என்ன காரியம் செய்து விட்டு விடுதலை பெற்று வீராதி வீரராக வெளி வருகிறார்?

ஒரு கோயிலில் பட்டப்பகலில் நடைபெற்ற படுகொலை வழக்கில் சிக்கியவர்தான் திருவாளர் சோ எழுதும் (துக்ளக் 11.12.2013) அந்த சங்கராச் சாரியார் ஸ்வாமிகள்.

ஒரு காரணமும் இல்லாமலா சங்கரராமன் படு கொலையில் அந்த சங்கராச் சாரியார் ஸ்வாமிகள் கைது செய்யப்பட்டார்?


கைது செய்தவர் கலைஞர் கருணாநிதி அவர்கள் அல்லவே! அப்படி அவர் ஆட்சியில் அந்த ஸ்வாமிகள் கைது செய்யப்பட்டு இருந்தால், அடேயப்பா, செவ்வாய்க் கிரகத்துக்குப் போய் கல்லெடுத்து வந்து கலைஞர் அவர்களின் மண்டையைக் குறி பார்த்து வீசி இருக்க மாட்டார்களா?


கைது செய்தது -_ அக்ரகாரத்து அம்மை யாராயிற்றே! உப்புக் கண்டம் பறி கொடுத்த பார்ப்பனத்திபோல் அல்லவா அக்ரகாரம் மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் பரிதவித்தது.


இப்பொழுது கூட என்ன நிலைமை? துக்ளக்கில் சோ. ராமசாமி அய்யராக இருக்கட்டும் தினமணியில் (28.11.2013) முழுப் பக்கம் கட்டுரையை எழுதித் தள்ளியுள்ளாரே திருவாளர் எஸ். குருமூர்த்தி அய்யராக இருக்கட் டும், ஓரிடத்தில்கூட சங்கராச்சாரியார் ஸ்வாமிகளைக் கைது செய்த ஆட்சி, செல்வி ஜெயலலிதா ஆட்சி என்று எந்த ஓர் இடத்திலாவது ஜாடையாகக் கூடக் குறிப்பிடாத சாமர்த்தியத்தை என்ன சொல்ல! என்ன சொல்ல!!

அதை விட்டு விட்டார்கள்.. பின் எதைப் பிடித்துக் கொண்டார்கள் தெரியுமா?
சங்கராச்சாரியாருக்கு எதிராக என்னென்ன விமர்சனங்கள் எழுதப்பட்டன? எப்படிப்பட்ட கிண்டலும், கேலியும் செய்யப்பட்டன என்பதையும், திராவிடக் கொள்கை யாளர்களாலும், கட்சியினராலும், ஏன் தங்களை மதச் சார்பற்றவர்கள் என்று கூறிக் கொள்ளும் ஊடகங்களாலும், சமுதாயப் பிரமுகர்களாலும் காஞ்சி மடமும், சங்கராச்சாரியார்களும் தரம் தாழ்த்திச் சித்தரிக்கப்பட்டனர் என் பதையும் இப்போது நினைத்தாலும் முகம் சுளிக்க வைக்கின்றன என்று புலம்பித் தள்ளி இருக்கிறார். கோயங்கா வீட்டுக் கணக்கப்பிள்ளை என்று அறிமுகமாகியுள்ள திருவாளர் எஸ். குருமூர்த்தி அய்யர்வாள்.


குருமூர்த்தி அய்யர்வாளுக்குச் சளைத்தவரா திருவாளர் சோ ராமசாமி அய்யர்?


அவர் பங்குக்கு எதையாவது எழுதி ஆசுவாசப்பட வேண்டாமா?
இதோ சோ: சங்கராச்சாரியார் கொலையாளி மட்டுமல்ல; மற்ற பல குற்றங்களைப் புரிந்தவர் என்று இங்கே பத்திரிகைகள் ஒருபுறம் தீர்ப் பளித்து விட்டன. தீர்ப்பளித்தது மட்டு மல்ல, கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று பல கட்சிகளும், அரசியல்வாதிகளும், கோருகிற ஒரே வழக்கு இது. இவை போதாது என்று கூட்டம் கூட்டமாக வக்கீல்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும், ஜாமீனை மறுக்க வேண்டும் என்கிறார்கள், கோர்ட் டுக்குப் போவதற்கு முன்பாக அவரை எப்படி வக்கீல்கள் அறையில் உட்கார வைக்கலாம்? என்று கேட்கிறார்கள். நீதிமன்றத்தில் அந்த 70 வயதானவர் உட்கார்ந்ததற்குக்கூட வக்கீல்களால் ஆட்சேபம் எழுப்பப்பட்டது -_ என்று புலம்பித் தள்ளியுள்ளார்.



திராவிட இயக்கத்தவர்களையும், பத்திரிகையாளர்களையும், வக்கீல் களையும் சும்மா பொரிந்து தள்ளி யுள்ளனரே.


ஒரு கேள்விக்கு இந்தப் பூணூல் திருமேனிகள் முடிந்தால் பதில் சொல்லட்டும் பார்க்கலாம்.


கொலை செய்யப்பட்டவர் யார்? காஞ்சி சங்கரமடத்தின் முன்னாள் மேலாளர். கொலை செய்யப்பட்ட நேரத்தில் காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் மேலாளர்.


உத்தமப்புத்திரன் என்று உச்சிமேல் வைத்து மாறி மாறி முத்தமழை பொழிகிறார்களே -_ அந்த பரிசுத்த யோவான் பற்றி கத்தை கத்தையாக வண்டவாளங்களைத் தண்டவாளத்தில் ஏற்றியவர் அல்லவா -_ அந்த சங்கரராமன். அவர் என்ன திராவிட இயக்கத்தவரா? அனுராதா ரமணன், பெண் எழுத்தாளர் யார்? பார்ப்பனப் பெண்தானே.


பத்திரிகை நடத்துவது தொடர்பாக தன்னை சங்கர மடத்துக்கு வரச் சொல்லி, பட்டப் பகலில் என் கையைப் பிடித்து இழுத்தார் என்று தொலைக்காட்சியிலேயே கண்ணீரும், கம்பலையுமாகக் கதறினாரே.
என் எதிரிலேயே மைதிலி என்னும் பெண்ணுடன் உறவு கொண்டார் என்று போட்டு உடைத்தாரே. இதற்குப் பிறகுமா பெரியவாள்? சங்கராச்சாரியார் ஸ்வாமிகள்?


குண்டூர் காமாட்சி, குருவாயூர் வனஜா, தாம்பரம் பேபி, திருவிடைமருதூர் சந்திரா என்று ஒரு நீண்ட பட்டியலைத் தந்தவர் வேறு யாருமல்ல-ர் _ பிற்காலத்தில் கொலை செய்யப்பட்ட சங்கரராமன் (புனைப் பெயர் சோமசேகர கனபாடிகள்).


ஒவ்வொரு நாளும், பிரம்ம முகூர்த்த நேரத்தில் விடியற்காலை நாலரை மணிக்கு சிறீரங்கத்திலிருந்து உஷா என்ற பெண் ஜெயேந்திரரோடு பேசிய கைப்பேசி உரையாடல் பிரசித்தி பெற்றதில்லையா?


இவற்றை ஒரு பக்கம் ஒதுக் கினாலும், மடத்து சாமியார் என்ற லட்சணம் எந்தத் தரத்தில்? ஒரு நாள் நள்ளிரவில் தண்டத்தை மடத்தில் விட்டு தலைமறைவான ரகசியம் என்ன?


அதனைத் தொடர்ந்து எப்போ தண்டத்தை விட்டுவிட்டு, மடத்தை விட்டுவிட்டு ஓடி விட்டாரோ, அந்த க்ஷணமே மடத்துக்கும், அவாளுக்கும் சம்பந்தம் இல்லை. உறவு அறுந்துபோய் விட்டது என்ற மூத்த சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி திருவாய் மலர்ந்தாரே -_ அதன் பொருள் என்ன? மூத்த மடாதிபதியே ஜெயேந்திரரை தார்மீக ரீதியாக ஒழுக்கப் பிசகானவர் என்று சொன்ன பிறகு சோ குருமூர்த்தி வகையறாக்களால் மகாஸ்வாமிகள் என்று அழைப்பது எந்த வகையில் ஒழுக்கமானது. பண்பாடானது?
நீதிமன்றத்தில் விடு தலை ஆகிவிட்டதா லேயே அவர் குற்றமற்ற வர் என்று பொருளா?


காந்தியார் படுகொலை யில் முக்கிய சூத்திரதாரியாரான சாவர்க்கார்கூட விடுதலை செய்யப் பட்டவர்தான். அதற்காக அவரை நிரபராதி என்று கருத முடியுமா? தீர்ப்பு வழங்கிய நீதிபதியே அவர் தப்பியது எப்படி என்ற ரகசியத்தை வெளியிடவில்லையா?

ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் மீதான கொலை முயற்சி வழக்கு ஒன்றும் இதே ஜெயேந்திரர்மீது இருக்கிறதே! ஆடிட்டர் பார்ப்பனர்தானே?


சங்கரராமன் கொலை வழக்குத் தொடர்பாக புதுச்சேரி நீதிபதியின் உதவியாளரிடம் ஜெயேந்திரர் தொலைபேசியில் நடத்திய உரை யாடல் ஊர் சிரிக்கவில்லையா? (அந்தப் பிரச்சினை கமுக்கமாகி விட்டதே!)


சம்பந்தப்பட்ட நீதிபதி வேறு இடத்திற்கு ஏன் மாற்றப்பட்டார்? அதன் பின்னணி என்ன? விளக்கு வார்களா திருவாளர் சோவும், குரு மூர்த்தியும்?


படுகொலை செய்யப்பட்ட சங்கர ராமன் மனைவியும், குடும்பத்தினரும், சங்கர மடத்தால் எப்படியெல்லாம் அச்சுறுத்தப்பட்டனர்? (பெட்டிச் செய்தி காண்க)
குற்றமற்றவர் என்பது உண்மை யானால் ஜெயேந்திரருக்கு ஏன் இந்தக் குறுக்குப் புத்தி?


ஒரு வழக்கில் 83 பேர் பிறழ் சாட்சி, இந்த வழக்கைத் தவிர வேறு ஒன்று உண்டா?


பிறழ்சாட்சி சொன்னார்களா? சொல்ல வைக்கப்பட்டார்களா? அதற்காக மேற்கொள்ளப்பட்ட ஏற்பாட்டின் தொகைகள் என்ன?


வெளியே விட்டால் சாட்சிகளைக் கலைத்து விடுவார்கள் என்பதற்காகத் தானே ஜாமீன் மறுக்கப்படுகிறது? இவர் விடயத்தில் என்ன செய்திருக்க வேண்டும்? ஜாமீனை ரத்து செய்துவிட்டு சிறையில் மீண்டும் தள்ளி இருக்க வேண்டாமா?


இத்தனை சாட்சிகளைக் கலைப் பதுவரை காவல்துறை என்ன செய்துகொண்டிருந்தது?

நியாயமாக இந்த வழக்கின்மீது தமிழ்நாடு அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும்; சட்டத்தின்முன் சங்கராச்சாரியாராக இருந்தாலும் சரி, சப்பாணியாக இருந்தாலும் சரி எல்லோரும் ஒன்றே!


இந்த வழக்கில் அப்பீல் செய்யக் கூடாது என்று திருவாளர் சோ பாவம் கெஞ்சுகிறார்.


வேறு எந்த வழக்கிலாவது இப்படி செய்தார்களா?


பேரறிவாளன், சாந்தன், முருகன் வழக்கில் நடந்த அநீதிபற்றி வாய் திறந்துள்ளனரா?


பார்ப்பனர்கள் மாறிவிட்டார்களா? பூணூல் பாசம் பூண்டற்றுப் போய் விட்டதா? புத்தியைக் கொஞ்சம் செல விடுங்கள் - புரியும் புரிநூலோரின் புன்மைச் செயல்கள்!




ஜெயேந்திரர் பேரம் பேசினார்

உங்கள் கணவரை ஜெயேந்திரர்தான் கொலை செய்திருப்பார் என்று நம்புகிறீர்களா?


என் ஆத்துக்காரர் இறந்தப்போ பலரும் அதுபற்றிப் பேசினா. வீட்ல அவர் எதையும் சொல்லாததால் எனக்கும் எதுவும் தெரியலை. பெரியவா, சகல அதிகாரமும் படைச்சவா. அவாளப்பத்தி எப்படிச் சொல்ல முடியும்? அந்தச் சமயத்துல போலீஸ் காட்டின கெடுபிடியைப் பார்த்து நாங்களே மிரண்டு போயிட்டோம். போலீஸெல்லாம் அவாளோட ஆளோன்னுகூட சந்தேகப்பட்டோம்.


அவரோட பதிமூனாவது நாள் விசேஷத்தப்போ, மகாப் பெரியவா அடக்கம் பண்ணின இடத்துக்குப் போனப்போ, என் மகனை பெரியவா கூப்பிட்டுப் பேசினா. நீங்க எல்லாரும் குடும்பத்தோட சென்னைக்குப் போயிடுங்க. இங்க இருந்தா போலீஸும், பத்திரிகைக்காரர்களும் தொல்லைப்படுத்துவா. உனக்கு மாதவப் பெருமாள் கோயில்ல வேலை போட்டு தர்றேன். மாசா மாசம் செலவுக்கு மடத்துலிருந்து பணம் தர்றேன்னு சொல்லியிருக்கார். ஆத்துல அம்மா ஒத்துக்க மாட்டான்னு மகன் சொன்னதும். சங்கர்ராமன் அவனை மாதிரியே புள்ளைய வளர்த்து வச்சிருக்கான்னு பக்கத்தில் நின்னவங்ககிட்ட சொல்லியிருக்கார்.


ஆரம்பத்துல வந்த கணபதியும் மடத்துல பணம் கொடுத்திருக்கா இத வாங்கிக்கோ, போலீஸோ, பத்திரிகைக் காரர்களோ வந்தா மடத்தைப் பத்தி எதுவும் சொல்ல வேணாம்னு சொன்னார். இதையெல்லாம் அவா ஏன் சொல்லணும்? அவர்தான் இதை செய்திருக்கணுமுன்னு போலீஸ் சொல்லுறத நம்பித்தானே ஆகணும்!


சங்கரராமனின் மனைவி பத்மா பேட்டியிலிருந்து (குமுதம் ரிப்போர்ட்டர் 16.12.2004)

சங்கர மடத்தில் ஒழுக்கக் கேடுகள்


அமெரிக்கக் குடியரசுத் தலைவர் கிளிண்டன் முறையற்ற பாலியல் நடத்தையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டார். அப்போது உலகமே பார்க்க அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. சட்டப்படி உண்மையைக் கண்டறியும் நடவடிக்கைக்கு நீங்கள் முட்டுக்கட்டை போடப் போகிறீர்களா? உலகம் போற்றும் நிறுவனங்கள் குற்றங்களின் கூடாரங்களாகி குழப்பத்தில் சிக்கிக் கிடக்க வேண்டுமா? அவற்றின்மீது சட்டப்படியான நடவடிக்கை கூடாதா? தார்மீக ரீதியான, சட்டரீதியான, தெய்வீக ரீதியான எந்தச் சட்டமாவது சங்கராச்சாரியார்கள் கொலை செய்ய உரிமை அளித்துள்ளதா? அதன்பிறகு அவரை விசாரிக்கக் கூடாது என்று வலியுறுத்துங்கள். தனது புனிதமான பாதையிலிருந்து அவர் விலகி விட்டால் சங்கராச்சாரியார் என்ற உரிமையையும் இழந்து விடுகிறார் விசாரணை நீடிக்கும் வரையில் மேலும் சர்ச்சைகளில் இருந்து மடத்தை காப்பாற்ற அவர் தனது பதவியை துறக்க வேண்டும். தார்மீக மற்றும் ஆன்மீக சக்தியின் அடையாளம் என சங்கராச்சாரியார்கள் கூறும் தண்டக்கோலை, அவர் வைததிருக்கவோ, அதை ஜெயிலுக்கு எடுத்துப் போகவோ எந்த நியாயமும் இல்லை.


கேள்வி: ஜெயேந்திரரின் தவறான செயல்பாடுகள்பற்றி தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?


பதில்: ஜெயேந்திரரின் வளர்ச்சியைக் கவனித்தால் அவரது தனி மனிதப் பண்புகளில் ஒரு ஒழுங்கற்ற தன்மை இருப்பது தெரியும். அதுதான் அவரை முரட்டுத் துணிச்சலான முடிவுகளை எடுக்க நிர்ப்பந்தித்தது. அவர் திடீர் உணர்ச்சிகளுக்கு ஆட்படுபவர் ராதாகிருஷ்ணனை கேளுங்கள் அவர் ஒரு முக்கியமான சாட்சி.


கேள்வி: காஞ்சி மடத்தின் வரவு -_ செலவு குறித்து சங்கரராமன் எதிர்ப்பு தெரிவித்தார். அதுதான் கொலைக்கான நோக்கமா?


பதில்: மடத்தின் வரவு -_ செலவுக் கணக்குகளை தாண்டியும், அவர் மடத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளார்.

கேள்வி:: உதாரணமாக...?


பதில்: அங்கு ஏராளமான ஒழுக்கக்கேடான செயல்கள் நடைபெறுகின்றன.
(அரசு வழக்கறிஞர் துல்சி Rediff.Com பேட்டியில்)


-----------------------மின்சாரம் அவர்கள் 7-12-2013 “விடுதலை” ஞாயிறு மலரில் எழுதிய கட்டுரை

சாயிபாபா ஒரு மேஜிக் வித்தைக்காரர்







புட்டபர்த்தி சாயிபாபா 24.4.2011 அன்று ஆந்திர மாநிலம் புட்ட பர்த்தியில் மரணம் அடைந்தார். 28 நாள்கள் மருத்துவமனையில் படாதபாடு பட்டார். சிறுநீரகம், கல்லீரல் என்று ஒவ்வொரு உறுப்புகளும் பழுதுபட்டு, மூச்சுத் திணறலும் ஏற்பட்டு, சாதார ணமாக மனிதர்களுக்கு ஏற்படும் அத்தனைத் துன்பங்களையும் உடல் ரீதியாக அனுபவித்தது பரிதாபமாகத் தான் இருந்தது. 96 ஆண்டுகள் வாழ் வேன் என்று அவர் சொன்னது பொய்த்துப் போய் விட்டது.

அவர் நோய் வாய்ப்பட்டதிலோ, மரணத் துன்பம் அடைந்ததிலோ, மரணம் எய்தியதிலோ கிஞ்சிற்றும் பகுத்தறிவாளர்களுக்கு மகிழ்ச்சி இல்லை.

அதே நேரத்தில் வாழ்ந்த காலத்தில் சாயிபாபா மக்களை மூடநம்பிக்கைச் சகதியில் ஆழ்த்தியது போதாதென்று, அவரது மரணத்தை வைத்தும் மக்களை மடமையில் ஆழ்த்தும் நாசகார செயல்களில் ஈடுபடுவதை மனிதப் பற்றும், பகுத்தறிவும் உடையவர்களால் எப்படிப் பொறுத்துக் கொண்டு இருக்க முடியும்?





இந்த நிலையில் நாம் நிமிர்ந்து நின்று மூடநம்பிக்கையின் முதுகெலும்பைப் பிளப்பது என்பது நமது அடிப்படைக் கடமையாகி விட்டது.

முதல் கேள்வி: பகவான் சாயிபாபா என்பது உண்மையானால் அவருக்கு ஏன் நோய் ஏற்பட வேண்டும்? மற்றவர்களின் நோய்களை எல்லாம் தம் பார்வையாலோ தரும் திருநீறாலோ குணப்படுத்தும் சர்வ சக்தி வாய்ந்தவர் என்று கூறுகிறார்களே, - அப்படிப்பட்ட மனிதனுக்கு தெய்வீகப் புருடனுக்குக் கொடும் நோய்கள் தாக்கலாமா?





சாயிபாபாவின் திருநீறும், பிரசாதங்களும் என்னாயிற்று? எதற்காக மிலேச்சன் இங்கிலீஷ்காரன் கண்டுபிடித்த மாத்திரைகளும், மருந்துகளும்?

96 வயது வாழ்வேன் என்றவர் ஏன் 85 வயதிலேயே மாண்டு போனார் என்ற கேள்விகளுக்கெல்லாம் விடை தர வேண்டாமா?


இவர் நாட்டைக் கெடுத்தது போதாதென்று மூன்றாவதொரு சாயிபாபாவும் தோன்றுவார் - அவர் பெயர் பிரேமசாய்; கருநாடக மாநிலத்தில் மாண்டியா மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் பிறப்பார் என்று செத்துப் போன சாயிபாபா சொல்லியுள்ளார் என்பதெல்லாம் அடுத்த ஒரு திட்டமிட்ட மோசடிக்கு முகூர்த்தக்கால் நடுகிறார்கள் என்றே பொருள்.



சிவசக்தி வடிவமானவர் தான் மறைந்த சாயிபாபாவாம்; அப்படி யென்றால் குறிப்பிட்ட ஒரு மதச் சிமிழுக்குள் அடங்கிக் கிடப்பவர் என்று ஆகி விடவில்லையா? கிறித்துவரும், இஸ்லாமியரும் இவரை எந்தக் கண் கொண்டு பார்ப்பது? என்கிற வினாக்கள் எழத்தான் செய்கின்றன.





உண்மையை ஒரு வரியில் சொல்ல வேண்டுமென்றால் சாயிபாபா ஒரு மேஜிக் வித்தைக்காரர், நாலு ரோடுகளில் வித்தை காட்டுபவர்கள் நம் நாட்டில் இல்லையா? அவர்களுக்குப் பிழைக்கத் தெரியவில்லை. இவரோ பக்திப் போதையில் சிக்கிக் கிடக்கும் மக்களை ஏமாற்றி ஏற்றம் கொள்ளலாம் என்று திட்டமிட்டு அதில் வெற்றி கண்டவர் என்று வேண்டுமானால் ஒப்புக் கொள்ளலாம்.

நமது கழகத்தில் மந்திரமா? தந்திரமா? கலையில் விற்பன்னராகத் திகழ்ந்த புரபசர் கே.ஆர். குமார் நினைத்திருந்தால், சாயிபாபாவுக்கு மேல் போய் குந்தியிருக்கலாமே! இன்னும் எத்தனை எத்தனையோ நம் கருஞ் சட்டைத் தோழர்கள் இந்தக் கலையில் தேர்ந்தவர்கள் ஆயிற்றே! இந்தத் தோழர்கள் மக்களின் அறியாமை இருளை விரட்டும் பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கின்றனர்.





இந்த சத்யநாராயண ராஜுவோ பிழைக்கத் தெரிந்த ஆசாமி, மக்களின் மடமையை அஸ்திவாரமாக்கி, அதன் மீது மாட மாளிகை கட்டி உல்லாச வாழ்வை மேற்கொண்டவர்.

ஒரு பி.சி சர்க்கார் நினைத்திருந்தால் அவர் கற்றறிந்த தந்திரக் கலையைப் பயன்படுத்தி ஆயிரம் சாயிபாபாக் களுக்கு இணையாக நடமாடியிருக்க முடியுமே! அவர்கள் எல்லாம் அதனை ஒரு கலையாகக் கொண்டவர்கள். பகவான் சாயிபாபா என்று நடமாடும் ஒருவரின் முகத்திரையைக் கிழித்து எறிய பிரபல பி.சி. சார்க்கார் விரும்பினார்.

ஒரு பெண்ணை இரண்டு துண்டாக்குவது, ஒரு யானையைக் காற்றில் மறைந்து போகச் செய்வது போன்ற மயிர்க் கூச்செறியும் நிகழ்ச்சிகளை யெல்லாம் கண்மூடி கண் திறப்பதற்குள் செய்து காட்டும் அந்தக் கலைஞர் சாயிபாபாவைச் சந்திப்பதற்கு வாய்ப்பினைக் கேட்டார். அனுமதி கிடைக்கவில்லை. வேறு வழியில்லாமல் பி.சி. சர்க்கார் என்ன செய்தார்? தான் ஒரு அஸ்ஸாம் வியாபாரி என்றும் தனக்கு ஆஸ்மா நோய் இருக்கிறது என்றும், அதிலிருந்து குணப்படுத்திக் கொள்ள விரும்புகிறேன் என்றும் கூறி, அனுமதியும் பெற்று சாயிபாபா ஆசிரமத்துக்குள் நுழைந்தாரே!

(பகவான் சாயிபாபா அதனைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது சரியான தமாஷ்!)

சாயிபாபா ஆசீர்வதிக்கும் அறைக்குள் கடைசி நபராக நுழைந்தார் சர்க்கார்; அஸ்ஸாமும், இந்தியும் கலந்த மொழியில் பேசினார். சாயிபாபாவால் புரிந்து கொள்ள முடியவில்லை; புரியவில்லை என்ற தொனியில் தலையை அசைத்தார் (பகவானாயிற்றே எந்த மொழியைப் பேசினாலும் தெரிந்து கொண்டு இருக்க வேண்டாமா - இப்படியெல்லாம் யார் சிந்திக்கப் போகிறார்கள்?) மொழி பெயர்ப்புக்கு ஆள் ஏற்பாடு செய்தனர்; என்ன பிரச்சினை? என்று சாயிபாபா கேட் டார். ஆஸ்த்மா பிரச்சினை என்றார் பி.சி. சர்க்கார்; என்னைப் பார்க்க வந்து விட்டீர்களே, உங்கள் நோய் குணமாகி விடும்! என்றார் சாயி.

எனக்கு ஏதாவது மந்திர மருந்து, திருநீறு போன்று தாருங்கள் என்றார் சர்க்கார்.

கக்கத்தில் வைத்திருந்த திருநீற்றுப் பையில் இருந்த சரக்குத் தீர்ந்து விட்ட நிலையில் என்ன செய்வது என்று சாயிபாபாவுக்குத் தயக்கம்.

சுற்றிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட பழக்கப்பட்ட சாயி சீடர்கள் தானே! குறிப்பை உணர்ந்து சாயிபாபாவுக்கு முன்னிருந்த பலகாரத் தட்டு எடுத்த சீடர் அதில் ஒரு சந்தனத்தை நைசாகப் போட்டு அந்தத் தட்டை சாயிபாபா பக்கத்தில் வைத்தார்.

இந்த ஜாலங்கள் எல்லாம் அன்றாடம் அங்கு நடப்பதுதானே!

பாபா கையை அசைத்து சந்தனத்தை வரவழைத்துக் கொடுத்தார்; பி.சி. சர்க்காருக்கு இந்தத் தந்திரம் தெரியாதா? உடனே இவர் கையை அசைத்து பக்கத்துத் தட்டிலிருந்து ரசகுல்லாவைக் கையில் வரவழைத்துக் கொடுத்து அசத்தினார்.

அவ்வளவுதான் வியர்த்துக் கொட் டியது ஆசாமிக்கு; சத்தம் போட்டார்; சாயிபாபாகூட இருந்த சிஷ்யர் களுக்கோ ஆத்திரம் கரை புரண்டது.

நான்தான் பி.சி. சர்க்கார் என்று கூறி வெளியேறினார். இவ்வளவு தகவல் களையும் பி.சி. சர்க்காரே இம்பிரிண்ட் ஆங்கில மாத இதழில் (1983 ஜூன்) விரிவாக எழுதி பகவான் என்னும் மூடு திரைக்குள் மறைந்திருந்த மோசடிப் பேர் வழியின் முகத்திரையைக் கிழித்தெறிந்தார். அப்பொழுதே விடுதலையும் அதனை மொழி பெயர்த்து வெளியிட்டது (விடுதலை 21.7.1983)

உண்மை இவ்வாறு இருக்க, சாயிபாபா பெரிய மகான் என்றும், பகவான் என்றும், சிவனின் அவதாரம் என்றும் தூக்கிப் பிடிக்கின்றனர் என்றால் - இது எவ்வளவு பெரிய சமூக மோசடி!

இன்னொரு முக்கிய தகவலும் உண்டு.

1992-இல் புட்டபர்த்தியில் நவீன வசதிகளைக் கொண்ட திருமண மண்டபம் ஒன்றை சாயிபாபா கட்டி யிருந்தார்; அதன் திறப்பு விழாவுக்குக் குடியரசுத் தலைவர் சங்கர்தயாள் சர்மா, பிரதமர் பி.வி. நரசிம்மராவ், மக்களவைத் தலைவர் சிவராஜ் பாட்டில், உள்துறை அமைச்சர் எஸ்.பி. சவான், ஆந்திர அமைச்சர் விஜய பாஸ்கர ரெட்டி, மத்திய விவசாய அமைச்சர் பல்ராம் ஜாக்கர் முதலியோரும் வந்திருந்தனர்.

அந்த விழாவில் திருமண மண்டபத்தை வடிவமைத்த தமிழ் நாட்டைச் சேர்ந்த ஏ. இராமகிருஷ்ணா என்னும் கட்டடக் கலைஞருக்கு, விழா மேடையில் சாயிபாபா ஒரு நினைவுப் பரிசை வழங்கினார். உடனடியாக தன் கையை அசைத்துத் தங்க சங்கிலி ஒன்றை வரவழைத்து அந்தக் கலைஞருக்கு வழங்கி அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தார்.


அந்த நிகழ்ச்சிகள் முழுவதும் ஆந்திரத் தொலைக்காட்சி நிறுவனத் தால் ஒளிப்பதிவு செய்யப்பட்டது. மேலும் அரை டஜன் பேர்கள் ஒளிப்பதிவு (வீடியோ) செய்திருந்தனர்.

தொலைக்காட்சி நிறுவனத்தினர் தங்கள் நிலையத்துக்குச் சென்று போட்டுப் பார்த்தபோது பேரதிர்ச்சி ஒன்று அவர்களுக்காகக் காத்திருந்தது.

புட்டபர்த்தி சாயிபாபாவின் உதவியாளர் மேடையில் சாயிபாபா கட்டடக் கலைஞருக்குத் தர வேண்டிய நினைவுப் பரிசைத் தரும்போது அதனோடு சேர்த்து தங்கச் சங்கிலி ஒன்றையும் தெரியாமல் வழங்குகிறார்.

நினைவுப் பரிசுக்கும் கீழே தங்கச் சங்கிலியை வைத்திருந்தது வீடியோ காமிராவில் பதிவாகி இருந்தது. தனது ஒரு கையில் நினைவுப் பரிசினை வழங்கும் சாயிபாபா, அப்படியே தங்கச் சங்கிலியை கைக்குள் மறைத்து, பிறகு கை அசைப்பின் மூலம் கொண்டு வருவதாக நடித்து, அதனைத் தந்து விட்டார். பதிவான இந்தத் தகவல் சாயிபாபாவின் கவனத்துக்கு வந்தவுடன், உடனே அதனை எரித்துவிடும்படி கட்டளை யிடப்பட்டது.

சொல்பவர் பாபா ஆயிற்றே - கோடிக்கணக்கான சொத் துக்கு அதிபர் ஆயிற்றே _ அவ்வாறே அது எரிக்கப்பட்டது. ஆனாலும் தனியார் தொலைக்காட்சிகள் எடுத்த வீடியோவை என்ன செய்வது! அதற்கும் முயற்சி வேகமாக மேற்கொள்ளப் பட்டன. ஆனாலும் அதற்குள் அது வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. டெக்கான் கிரானிக்கல் ஆங்கில நாளேடு படத்துடன் அப்படியே வெளியிடவும் செய்து விட்டது (24.11.1992)

டெக்கான் கிரானிக்கல்லில் வெளி வந்த அந்தச் செய்தியைப் படத்துடன் விடுதலையும் வெளியிட்டது (26.11.1992 முதல் பக்கம் தலைப்புச் செய்தி)

பகவான் பெயரில் எவ்வளவுப் பெரிய மோசடி! இதற்கு இந்நாட்டில் உள்ள குடியரசுத் தலைவர்களும், பிரதமர்களும், தலைவர்களும் பராக்குப் பாடுகிறார்கள் என்றால் இது நாடுதானா? நாகரிக உலகில்தான் நாம் வாழுகிறோமா? கூட்டத்துடன் கோவிந்தா போடு வதுதான் நல்லவர்களுக்கு அழகா?

பகவானுக்குப் பணம் எதற்கு? ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் சொத்தாம்; 50 ஆயிரம் கோடி ரூபாய் கையிருப்பாம்.

கை அசைப்பில் எதையும் சாதிக்கக் கூடிய ஒரு பகவானுக்கு ஏன் இவ்வளவு திரண்ட சொத்துகள்? கேள்வி கேட்பதுதானே அறிவு நாணயம்?

சாயிபாபா பார்ப்பனர் அல்லர் _ சூத்திரர்தான். ஆனாலும் அவர் குவித்து வைத்திருக்கும் திரண்ட சொத்துக்களை நிருவகிப்பது யார்? உள் குத்துகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

இதற்குள்ளும் நுழைந்து தமிழ் நாட்டுப் பார்ப்பனர்கள் கபளீகரம் செய்து விடுவார்கள் போல் தோன் றுகிறது.

டி.வி.எஸ். அய்யங்கார் குடும்பத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் வேணு. சீனிவாசன், தமிழ்நாட்டைச் சேர்ந்த சத்யஜித் என்ற இன்னொரு பார்ப்பனர், முன்னாள் அய்.ஏ.எஸ். அதிகாரியான சக்ரவர்த்தி என்ற தமிழ்நாட்டுப் பார்ப்பனர்- இவர்களுள் ஒருவர் மோசடியாக சேர்க்கப்பட்ட சொத்துக்கு அதிபதியாக ஆகப் போகிறார்கள். கொட்டிக் கொடுத்த பக்தர்களோ வாயில் விரலை வைத்துக்கொண்டு போக வேண்டியதுதான்.

மருத்துவமனைகளைக் கட்டினார்; கல்வி நிறுவனங்களை ஏற்படுத்தினார் என்பதெல்லாம் நல்ல காரியங்கள்தாம்; தவறு செய்கிறோம்; மக்களை மோசடி செய்கிறோம் என்பதைத் தெரிந்து தனக்குள் முற்றாக அறிந்த நிலையில் இவை போன்ற காரியங்களைச் செய்வது அவரைப் பொறுத்தவரை தவிர்க்கப்பட முடியாதவை ஆகி விட்டன என்பதுதான் உண்மை.

(அடுத்தடுத்துப் பல திடுக்கிடும் கசப்பான உண்மைகள் அணி வகுக்கும்)------------------மின்சாரம் அவர்கள் 30-4-2011 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

Thursday 24 April 2014

தலித்துகள் ...இந்துக்கள் இல்லை .. இல்லவே ..இல்லை

இன்று  தேர்தல்  நாள் .... இந்து  என்று காவி ... என்று  கடை  விரித்தவர்கள் ....

தங்கள் வாக்கை  அறுவடை . செய்யகத்து  இருக்கிறார்கள் .......

இன்று உங்கள்  வாக்கை  ,,,மனசாட்சி படி ...பதியுங்கள் ....

சுதந்திரமாய் ....பதியுங்கள் ....

நீங்கள்  யாருக்கு  வேண்டுமானாலும் ... உங்கள்  வாக்கை  அளியுங்கள் ...

ஆனால் ..நம்ம  ஜாதிக்கு என்றோ ..நம்ம  மதத்துக்கு  என்றோ  ......

வாக்கு  பதியாதிர்கள் ..............ஜாதி என்று  ,,மதம் என்று .....

...இப்படி தான்  ... ஆண்டாண்டு காலமாய் ....

நம்மை சொரண்டி  பிழைத்து கொண்டு இருக்கிறார்கள்  இந்த  சொரணை

கெட்ட  ஜென்மங்கள் ...

பெரியார்  சொன்னார் ....தலித்துகள் ..தங்களை  இந்துகலாய் .... எண்ணிக்கொண்டு
இருக்கிறார்கள் ....

தாங்கள்  யார் என்று  எப்போது  உணர் கிறார்களோ ........

அப்போது தான் ....

அவர்களுக்கு விடுதலை .......

தலித்துகள் ...இந்துக்கள் இல்லை  .. இல்லவே ..இல்லை


இந்துக்களின் பேரை சொல்லி நக்கி பிழைத்து இந்துக்கள் இடும் நாலு காசில் உடல் வளர்த்து ஊரில் கலகம் வளர்க்கும் காவிகளே

குழந்தைகள் கையில் கால் மிதிகளை கையில் ஏந்தியபடி வருவது புரிந்து இருக்கும் என நம்புகிறேன், தங்களை தேச பக்தர்கள் என்று அடையாளப்படுத்திக்கொள்ளும் காவி கயவர்கள்தான் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்று பார்ப்பனர்களால் அடையாப்படுத்தியதின் விளைவு சுடு மணலில் கால் மிதிகளை கையில் ஏந்தியபடி செல்கிறது பள்ளி குழந்தைகள்.

தேசபக்த வேடமிட்டு நாட்டை ஆட்டையைப் போட முயலும் காவி பயங்கரவாத கும்பலுக்கு ஆதரவாக செயல்படுபவர்களின் கவனத்திற்கு!

இந்துக்களின் பேரை சொல்லி நக்கி பிழைத்து இந்துக்கள் இடும் நாலு காசில் உடல் வளர்த்து ஊரில் கலகம் வளர்க்கும் காவிகளே. இதோ உன் மதத்தில் பட்டவன் கையில் செருப்பை ஏந்தி நடக்கின்றான் சமூகத்தில் சம உரிமை கிடைக்காமல் இழி சொல்லுடன் பழி பாவங்களை ஏற்று வாழுகிறானே அவனின் துயர் துடைக்க இந்து முன்னனியும் இந்து மக்கள் கட்சியும் பாஜகவும் இதுவரை என்ன கிழித்து இருக்கிறது?

உங்களால் என்ன முடியும்...? மதக்கலவரங்களை மூட்டி இந்து இசுலாமிய பிரிவினைக்கு தூபம் போடுவதை தவிர்த்து இந்துக்களுக்கு என்று காவிகள் இதுவரை என்ன செய்திருக்கிறார்கள்...?



சேரியை ஒழித்து இருக்கிறீர்களா...? இசுகாடு, சுடுகாடுகளை ஒன்றாக்கி இருக்கிறீர்களா...?சமூகத்தில் வாழும் அனைத்து சாதி இந்துக்களையும் ஒரே வளையத்திற்குள் அரவணைத்து இருக்கிறீர்களா..? ஏற்றத் தாழ்வுகளை நீக்கி இருக்கிறீர்களா...?


பிறகு என்ன வெங்காயத்திற்கு இந்து முன்னனியும்,இந்து மக்கள் கட்சியும்,பாஜகவும்...?


அவன் கையில் ஏந்தும் செருப்பை உங்கள் மீது வீசி எறியும் முன் அவன் காசில் உண்டு கொழுக்கும் காவி கூட்டங்களே திருந்தி கொள்ளுங்கள்.

Wednesday 23 April 2014

அவதாரங்களிடம் ஆறு கேள்விகள்!


அவதாரங்களிடம் ஆறு கேள்விகள்!



இந்தப் பதிவை எழுதியதற்காக என்னை நானே பாராட்டியதுண்டு. நீங்கள் போற்றுவீர்களோ தூற்றுவீர்களோ இதைப் படித்தவுடன் உங்கள் வதனத்தில் புன்சிரிப்பு மலர்வது உறுதி. பல நாட்களாகப் புதிய பதிவு எழுத என் உடலும் மனமும் ஒத்துழைக்காததால் இந்த மீள்பதிவு.




கடவுளின் அவதாரங்களிடம் ஆறு கேள்விகள்.


ஒன்று:


மனிதராகப் பிறந்த அனைவருமே, அன்றாட வாழ்க்கையில், பசி வந்தால் உண்ணுகிறார்கள்; தாகமெடுத்தால் நீர் அருந்துகிறார்கள்; உறங்குகிறார்கள்; விழிக்கிறார்கள்; காலைக் கடன் கழிக்கிறார்கள்; குளிக்கிறார்கள்; நோய் வந்தால் மருத்துவரிடம் போகிறார்கள்.


நீங்களும் வாய்க்கு ருசியாக உண்ணுகிறீர்கள்; சொகுசுப் படுக்கையில் உறங்குகிறீர்கள்; விழிக்கிறீர்கள்; மலம் கழிக்கிறீர்கள்; சிறுநீரை வெளியேற்றுகிறீர்கள்; உடம்புக்கு ஒரு கேடு வந்தால் மருத்துவரைத் தேடுகிறீர்கள.


எனவே, நான் உங்கள் முன் வைக்கும் முதல் கேள்வி............


உடல் அளவில், சாதாரண மனிதரிடமிருந்து கடவுளின் அவதாரமான நீங்கள் எவ்வாறு வேறுபடுகிறீர்கள்?



இரண்டு:


பிரச்சினைகளும் போராட்டங்களும் நிறைந்த இந்த நிலவுலகில், அற்பப் பிறவிகளான நாங்கள், கோபம், தாபம், சூதுவாது, போட்டி, பொறாமை போன்ற பல கெட்ட உணர்ச்சிகளுக்கும், சில நல்ல உணர்ச்சிகளுக்கும் ஆட்பட்டுத் தவிப்பது மறுக்க முடியாத உண்மை.


கடவுளின் இன்னொரு வடிவமான நீங்கள், மக்களைச் சந்திக்கும் போதெல்லாம், முகத்தில் புன்னகை தவழ, விழிகளில் அருள் வெள்ளம் பொங்க நிஜக் கடவுளாகவே காட்சி தருகிறீர்கள்.


கடவுள் விருப்பு வெறுப்பு அற்றவர் என்கிறீர்கள். நீங்களோ அப்படிப்பட்டவரல்ல.


எதற்காக இந்தக் கடவுள் வேடம்?


காசுக்காகவா? காம சுகத்துக்காகவா?



மூன்று:


காமம் பொல்லாதது!


வயிற்றுப் பசியை வெல்லலாம். [உண்ணா நோன்பிருந்து மரணத்தை தழுவியவர்களை நினைவு கூர்க]. காமப் பசியை வெல்வது இயலாது; கட்டுப்படுத்தத்தான் முடியும்.


மதுவைக் குடித்தால்தான் போதை வரும் . அழகு மங்கையரை நினைத்தாலே

காமம் என்னும் போதை தலைக்கேறும்.


கடவுளின் அவதாரம் என்று சொல்லிக் கொண்டாலும், நீங்களும் ஒரு மனிதர்தான்.


அழகழகான பெண்களைப் பணிவிடை செய்ய ‘வைத்து’க் கொண்டு, நாடி

வரும் இளம் பக்தைகளைத் தொட்டுத் தடவியும் கட்டி அணைத்தும் புதுப் புதுச் சுகங்களை அனுபவித்துக் கொண்டு, “நான் துறவறம் காப்பவன்” என்று உலகறியச் சொல்லித் திரிகிறீர்களே, உங்களுக்கெல்லாம் மனசாட்சி இல்லையா? வெட்கம், மானம், சூடு, சொரணை என்று எதுவுமே இல்லையா?



நான்கு:


பிரபஞ்சத்தைப் பரிபாலனம் செய்வதற்கு, உயிரினங்களைக் காப்பதற்குக் கடவுள் என்று ஒருவர் இருப்பதாகச் சொல்கிறீர்கள். அவர் எங்கும் இருப்பவர்; தூசு, துரும்பு, அணு, அணுவுக்குள் அணு என்று அனைத்திலும் ஊடுருவியிருப்பவர் என்கிறீர்கள்.


அந்தக் கடவுள் இருக்கும் போது இன்னொரு கடவுளாக நீங்கள் எதற்கு?



ஐந்து:


நீங்கள் கடவுளின் அவதாரம்.


இந்தப் பிரபஞ்சம் எப்போதிருந்து இருக்கிறதோ அப்போதிருந்து எத்தனை முறை கடவுளின் மறு வடிவமாக அவதரித்திருக்கிறீர்கள்? இனியும் அவதரிப்பீர்களா?



ஆறு:


மண்ணில் தோன்றிய அனைத்து உயிர்களும் மண்ணோடு மண்ணாவது, அல்லது, எரித்தால் சாம்பல் ஆவது நிச்சயம்.


உங்களுக்கும் அதுதான் கதி என்றாலும்..................................................................


கடவுளின் அவதாரம் என்று பீத்திக்கொள்ளும் நீங்கள் சாகும்போது, மக்கள் காணும் வகையில் பூத உடலோடு விண்ணில் மறைந்து ஓர் அதிசயத்தை நிகழ்த்துவீர்களா?


பதில் அறிய ஆவலுடன் காத்திருக்கிறோம்.

சாமி கும்புடுற எல்லாருமே சுயநலவாதிகள்தான்.


கேதார்நாத் கடவுளும் மறை கழன்ற கோயில் பூசாரியும்!


எல்லாருமே சுயநலவாதிகள்தான்.




”என்னையும் என் குடும்பத்தாரையும் நோய் நொடி இல்லாம காப்பாத்து”ன்னுதான் சாமியை வேண்டிக்கிறாங்களே தவிர, “ஊர் உலகத்தில் உள்ள அத்தனை பேரையும் நீ காப்பாத்தணும்”னு யாராவது வேண்டிக்கிறாங்களா? இல்லையே!




ஒரு சில இளிச்சவாயர்களைத் தவிர, மிச்சப்பேரெல்லாம் கோரிக்கை நிறைவேறின அப்புறம்தான் ‘நேர்த்திக் கடனை’ச் செலுத்துறாங்க. ”அடுத்த வாரம் செய்யுறேன்... அடுத்த மாசம் செய்யுறேன்”னு தவணை சொல்லிட்டே வந்து சாமிக்கே ‘அல்வா’ கொடுக்கிறவங்களும் இருக்காங்க!




“இந்தக் குறையை நிவர்த்தி பண்ணிக் குடுத்தீன்னா, உனக்குக் கிடா வெட்டிப் பொங்கல் வைக்கிறேன்”, ”உண்டியலில் பணம் போடுறேன்”, ”மொட்டை போடுறேன்”னு நேர்ந்துக்கிறதெல்லாம் வடிகட்டின முட்டாள்தனம்னு நினைக்கிறவன் நான்.




நாம தர்ற விருந்தை சாமி பந்தியில் உட்கார்ந்து சாப்பிடுதா? உண்டியலில் போடுற பணத்தை எடுத்துச் செலவு பண்ணுதா? காணிக்கையா தர்ற தலைமுடியை வித்துக் காசு பண்ணுதா? இல்லையே! எல்லார்த்தையும் மனுஷங்கதானே முழுங்கி ஏப்பம் போடுறாங்க. அப்புறம் எதுக்கு நேர்த்திக்கடன்?




கடவுள்கிட்டப் பேரம் பேசுறது எனக்குக் கொஞ்சமும் பிடிக்காத விஷயம்.

ஒரு கஷ்டம் வந்தா, கோயிலுக்குப் போயி, சூடம் பொருத்திக் கும்பிடுவேன் அவ்வளவுதான்.




என் கஷ்டம் தீர்ந்தா, அஞ்சோ பத்தோ உண்டியலில் போடுவேன். ”நீ நல்லா இருக்கணும் சாமி”ன்னு வாழ்த்திட்டு என் வேலையைப் பார்ப்பேன்.




சாமி கண் திறக்கலேன்னா என்ன செய்வேன் தெரியுங்களா?




நம்ப மாட்டீங்க, “நீயெல்லாம் ஒரு சாமியா? போயும் போயும் உன்கிட்டயா வேண்டுதல் வெச்சேன்”னு வாய்க்கு வந்தபடி திட்டித் தீர்த்துடுவேன்.




திட்டுனா சாமி கோவிச்சுக்குமேங்கிற பயமெல்லாம் எனக்கு இல்லீங்க. தன்னைத் திட்டுறதையே தொழிலா வெச்சிருக்கிற நாத்திகர்களையே அது தண்டிக்கிறதில்ல. அப்பிராணி என்னையா தண்டிக்கும்?




ஒரு சாமிகிட்ட ஒரு தடவைதான் கோரிக்கை வைப்பேன். அப்புறமும் கஷ்டம் வந்தா வேற சாமியைத் தேடிப் போயிடுவேன். ஊர் உலகத்தில் சாமிகளுக்கா பஞ்சம்?




சந்தர்ப்பவாதின்னு திட்டுறீங்களா? பரவாயில்லீங்க.




இந்தப் பதிவைப் படிச்சுட்டிருக்கிற நீங்க எப்படின்னு எனக்குத் தெரியாது. ஆனா, நம்ம மக்களைப் பத்தி எனக்கு நல்லாவே தெரியும். சாமி நல்லது செய்யலேன்னாலும் அதைத் திட்டுற கெட்ட குணம் அவங்களுக்குக் கொஞ்சமும் இல்ல.




வறுமையாலயும் நோய் நொடிகளாலயும் ஆயிரக் கணக்கில் மக்கள் செத்துட்டே இருக்காங்க. அவ்வப்போது, சுனாமி மாதிரியான இயற்கைச் சீற்றங்களால லட்சக் கணக்கில் சாகுறாங்க. இதையெல்லாம் கடவுள் கண்டுக்கிறதில்லேன்னு நாத்திகர்களைத் தவிர வேறு யாரும் கடவுளைச் சாடுறதில்ல; மனுசன் செய்யுற தப்புகள்தான் இந்த மாதிரி அழிவுகளுக்கெல்லாம் காரணம்னு சொல்லுறதை வழக்கமா வெச்சிருக்காங்க!




உத்தரகாண்டில் பேய் மழை பெய்து வரலாறு காணாத அளவுக்கு நம் மக்கள் இறந்து போனாங்க. பாதிக்கப்படாதவங்க மட்டுமில்ல, தப்பி உயிர் பிழைச்சவங்ககூட கடவுளைச் சாடலையே, கவனிச்சீங்களா?




“கடவுள்தான் காப்பாத்தினார்”னு சிலர் சொல்லவும் செய்யுறாங்க!




நீங்க எப்படியோ, என்னால கடவுளைத் திட்டாம இருக்க முடியல. பாவங்களைப் போக்கிப் புண்ணியம் சேர்க்கணும்னுதானே மக்கள் உத்தரகாண்டில் குடியிருக்கிற கடவுளைத் தேடிப் போனாங்க. தன்னைத் தேடி வந்தவங்களைக் காப்பாத்துறது அவரோட கடமை இல்லையா? ஏன் காப்பாத்துல? அப்புறம் எதுக்கு அவரைத் தேடிப் போகணும்? கும்பிடணும்?




தினம் தினம் தினசரிகளில் உத்தரகாண்டின் சோகங்களைப் படிக்கிறபோதெல்லாம் கடவுளைத் திட்டிட்டிருந்த நான், 23.06.2013 தேதியிட்ட தினத்தந்தியில், ஒரு செய்தியைப் படிச்சதும் ஆச்சரியத்தில் முழுகிப் போனேன். ‘கேதர்நாத் பேரழிவு பற்றி கோவில் பூசாரி பரபரப்புத் தகவல்’ என்னும் தலைப்பில் வெளியான அந்தச் செய்தியை நீங்களும் படிச்சிருப்பீங்க. படிக்காதவங்க படியுங்க.




‘கடந்த ஞாயிற்றுக் கிழமை [16-ந் தேதி] கேதர்நாத் கோயில் வளாகத்திலும், சுற்றுப்புறத்திலும் பேய் மழை கொட்டியது.




இரவு 08.15 மணிக்கு மக்களின் ”ஓ...”வென்ற அலறல் சத்தம். மந்தாகினி ஆறு பயங்கர ஆவேசப் பேரிரைச்சலுடன் கொந்தளிப்பதைக் கேட்க முடிந்தது. எங்களைச் சுற்றிலும் இருந்த மலைச் சிகரங்கள் வெடித்துச் சிதறுவது போலிருந்தது அந்தப் பேரிரைச்சல்.




8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆதிசங்கரரின் சமாதி, அவரின் இரண்டு சிலைகள், ஒரு ஸ்படிக லிங்கம், அனுமான் சிலை என்று எல்லாவற்றையும் வெள்ளம் வாரிக்கொண்டு போனது. நள்ளிரவு வரை 12 பேர் கோயில் வளாகத்தில் தங்கியிருந்தோம்.




மறுநாள் காலையில், நான் பார்த்த இடமெல்லாம் பிணங்கள்தான். அவற்றை நாய்களும் கழுகுகளும் தின்றுகொண்டிருந்தன.




மந்தாகினியின் பொங்கிப் பெருக்கெடுத்த வெள்ளம் மேலும் பல மலைகளைப் பெயர்த்து வீழ்த்தியது. பலர் மண்ணில் புதைந்தார்கள். மேலும் பலரை ஆறு அடித்துச் சென்றது.




ஒரு பூகம்பம் போல, சிவ தாண்டவம் போல, மரண நாட்டியம் போல எல்லாமே நடந்து முடிந்துவிட்டது. சிவலிங்கம் இருந்த கோவிலின் கருவறை தவிர வேறு எதுவும் மிஞ்சவில்லை.




மந்தாகினியில் வெள்ளம் பெருகிக்கொண்டே இருந்தது. அழிவுகளும் தொடர்ந்தன. உயிர் பிழைக்க ஓடிய நூற்றுக்கணக்கானவர்களில் நானும் ஒருவனாக இருந்தேன்; பனிக்கட்டி போல் குளிர்ந்த சரஸ்வதி ஆற்றில் குதித்து நீந்திக் கரை சேர்ந்தேன்; பைரன் கோவிலை அடைந்தேன். கிராம வாசிகள் உதவினார்கள். ராணுவ ஹெலிகாப்டர்கள், மற்றவர்களோடு சேர்த்து என்னையும் மீட்டது. நான் இப்போது என் கிராமத்தில் இருக்கிறேன்.....’




இப்படியாகத் தன் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்ட கோவில் ’பூசாரி ரவிபட்’ முத்தாய்ப்பாகச் சொன்ன சொற்கள்தான் இந்த நிகழ்ச்சியின் ‘ஹை லைட்’!




அப்படி என்ன சொன்னார் அவர்?!


“இப்போது என் மனதில் உலா வரும் எண்ணமெல்லாம் ஒன்றே ஒன்றுதான். கோவிலில் உள்ள என் சிவபெருமானை யார் கவனித்துக்கொள்வார்கள்? அங்கே யார் தீபம் ஏற்றுவார்கள்? யார் பூஜை செய்வார்கள்?”




”என் மனதில் உலா வரும் எண்ணம் ஒன்றே ஒன்றுதான்”னு அவர் சொன்னதைக் கவனிங்க.




மக்கள் பிணங்களாய்க் குவிந்து கிடந்ததும், உயிர் தப்பினவங்க அடர்ந்த இருள் சூழ்ந்த மலைக் காடுகளில் ஊண் உறக்கமில்லாம அலைஞ்சி திரிஞ்சதும் இவருக்கு அடியோடு மறந்து போச்சு. சிவபெருமானின் அனாதரவான நிலை மட்டுமே மனசை வருத்துது. ”தீபம் ஏற்றுவார் யார்? பூஜை செய்வார் யார்?”னு கேட்டுப் புலம்புற இவரைப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்களோ எனக்குத் தெரியாது. நான் நினைக்கிறதைச் சொல்லுறேன்..........




”முழுக் கிறுக்கன்.”